Sunday 27 July 2014

பட்ட பெயர்கள் (உடையார் ,வன்னியர் ,நயினார் ,கவுண்டர் ,முத்துராஜா ,தேவர் ).

 https://www.facebook.com/தமிழர் -வரலாற்று -ஆய்வு -மையம்-449518038569336/

பட்ட பெயர்கள் (உடையார் ,வன்னியர் ,நயினார் ,கவுண்டர் ,முத்துராஜா ,தேவர் ).


 உடையார் என்ற சொல் பட்ட பெயர் .இச்சொல் இன பெயர் கிடையாது



'..கரடி வேட்டுவரில் மானபரன பல்லவரயைன் பிள்ளை திருவெண்உடையார் வெஞ்சமகூடல் ஆளுடையார் விகிர்தருக்கு...'
(கரூர் கல்வெட்டு ,கொங்கு சோழர் ,கி பி 1248).

'...தென் பூவானிய நாட்டில் குளகுறிச்சியில்   ஊராளிகளில் பாத வேட்டுவரில் பிள்ளப்பன் உடையனேன் என் ஏரியில் --- '
(சேலம் கல்வெட்டு ,கொங்கு பாண்டியர் ,கி பி 1292)

'..கொண்ட நாடுடைய வெட்டுவதி அரையனான மல்லன் வெங்கடவன்..'
(தஞ்சாவூர் கல்வெட்டு(S.I.I,Vol XII,P-34),பல்லவ மன்னர்-நிருபதுங்க வர்மன் ,கி .பி 872).
கொண்ட நாடு + உடைய =கொண்ட நாடுடைய

இந்த மூன்று கல்வெட்டுகளும் வேட்டுவ குலத்தை சேர்ந்தது.உடையார் என்ற பட்ட பெயர் வேட்டுவ குலத்துக்கு இருப்பதை இந்த கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

  '...வீரநஞ்சராயர் உடையார் ...'
(திருப்பூர் கல்வெட்டு ,மைசூர் அரசர் ,கி .பி 1489) மைசூர் அரசர்களுக்கு(கன்னடகாரர்) உடையார் என்ற பட்ட பெயர் இருந்ததை இந்த கல்வெட்டு மூலம் அறியலாம்.

'...பார்க்வகோத்திரத்து மிலாடுடையான் அகலங்கன் மலையராதித்தனான செம்பியன் மிலாடுடையானேன் ......செம்பியன் மிளாடுடையனேன்...'
(பேளூர் கல்வெட்டு ,ஆதித்தன் 2,கி .பி 959). இந்த கல்வெட்டு உடையார்(பட்ட பெயர் ) இனத்தை சேர்ந்தது .

மிலாடு + உடைய = மிளாடுடையனேன்
உடைய(உடைமை ) என்ற சொல்லில் இருந்து உடையார் என்ற சொல் வந்தது.


வன்னியர்  என்ற சொல் பட்ட பெயர் .இச்சொல் இன பெயர் கிடையாது.



வன்னியர் என்ற சொல் பட்டபெயர் வன்னியர் என்ற சொல் இன பெயர் கிடையாது
'....கொடைக்கு கருணன் சத்தியத்துக்கு அரிச்சந்திரன் மறத்துக்கு வன்னியன் அழகுக்கு மன்மதன் பரிக்கு நகுலன் கரிக்கு உதையன் வில்லுக்கு விசையன் மல்லுக்கு வீமன் ...' (அல்லால இளையன் செப்பேடு ,கி பி 16) இங்கு வன்னியர் என்ற சொல் இனத்தை குறிக்கவில்லை.இங்கு வன்னியர் என்ற சொல் வீரர் என்று கூறுகிறது .

'...ஆத்தூர் மாந்தபடை வேட்டுவன் வன்னிய கவுண்டன் சாட்சி ..' (தென்னிலை செப்பேடு ,கி பி 1775) இங்கு வன்னிய கவுண்டன் என்பவர் மாந்தபடை வேட்டுவ குலத்தை சேர்ந்தவர் என்று தென்னிலை செப்பேடு கூறுகிறது .இங்கு வன்னிய கவுண்டன் என்ற சொல் சாதி பெயர் கிடையாது . இன்று வேட்டுவர்களில் வன்னி வேட்டுவ குலத்தினர் வாழ்ந்து வருகிறார்கள் .

வன்னி முத்தரையர்களை பற்றி கோவை ,கணியூர் செப்பேடு கூறுகிறது (கி பி 16)
விஜயநகர அரசர் 'ராஜா வன்னிய ராஜா ஸ்ரீ மல்லிகார்ஜுன தேவமகாராயர் ' பற்றி வில்வநல்லூர் செப்பேடு கூறுகிறது (தமிழ்நாடு செப்பேடுகள் தொகுதி -2)
மலையமான் இனத்தை (உடையார் இனம் ) சேர்ந்த ஒருவரின் பெயர் 'வன்னிய தேவேந்தர மலையமான் ராமன் போர் கிடாய் கொடாதான் ' என்று கல்வெட்டு (ARE 215 of 1934-35) கூறுகிறது .

கள்ளர் இனத்தை சேர்ந்த ஒருவரின் பெயர் 'வன்னியர் மிசிரிகண்டன் பொன்னம்பலநாத தொண்டைமான் 'என்று கல்வெட்டு ( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-845,ஆலங்குடி )கூறுகிறது .
'...இந்த நாடுகளையும் அறியாமல் செங்கீரையில் பிள்ளன் விசையரையனும் புறம்பன் வன்னியரையனும் ஆலங்குடி மழவராயர் படையை அழைத்து வந்து நாட்டிலே ...'( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-818,திருமெய்யம் ) இங்கு 'வன்னியரையனும்' என்ற சொல் இனத்தை குறிக்கவில்லை .

'.....புரட்டாதி மதம் 14 நயினார் மாவலிவாணதிராயர் காரிய காரியத்துக்கு .........'( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-815,திருமெய்யம் ,கி பி 15 ) மாவலி வாணதிராயருக்கு 'நயினார்'என்ற பட்ட பெயர் இருந்ததை இந்த கல்வெட்டு கூறுகிறது .


'......நெடுவாசலில் வன்னியரில் மாவலிவாணதிராயர் மக்களில் ......காலிங்கராயரும் ..' ( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-971,ஆலங்குடி ) மாவலி வாணதிராயருக்கு 'வன்னியர் 'என்ற பட்ட பெயர் இருந்ததை இந்த கல்வெட்டு கூறுகிறது .

 '...இராகுத்த மிண்டன் சொரிவன்னியர் சூரியன் புவனேக வீரன் பதினெட்டு வன்னியரை முதுகு புரங்கண்டான் காங்கேயனை வென்று கடையில் விலை கொண்டான் வேட்டுமாவலிக்கு விரிந்திடோம் பாண்டியன் ..'
( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-758,திருமெய்யம் ,கி பி 15 )
வேட்டுமாவலிக்கு -வேட்டுவமாவலிக்கு

வன்னியர் என்ற பட்டபெயர் வேட்டுவர் இனம் ,மலையமான் இனம் (உடையார் இனம் ),கள்ளர் இனம் ,முத்தரையர் இனம் ,விஜயநகர் அரசர் (கன்னடர் ) போன்ற சாதிகளுக்கு இருந்ததை கல்வெட்டுகள் கூறுகிறது .

 மல்லன் என்ற சொல் இன பெயர் இல்லை

'.. இடிகரையில் இருக்கும் வெள்ளாளன் பை யைய்யரில் மள்ளன் சிறியான் ' என்பவரை பற்றி கல்வெட்டு (கோவை ,கி பி 13) கூறுகிறது . இக்கல்வெட்டு வெள்ளாளர் இனத்தை சேர்ந்தது .


'...கொண்டநாடு உடைய வேட்டுவதி அரையர் மல்லன் வேங்கடவன் ' என்பவரை பற்றி கல்வெட்டு(தஞ்சாவூர் ,
(S.i.i XII page-34). இக்கல்வெட்டு வேட்டுவர் இனத்தை சேர்ந்தது .

'...மீனவன் தமிழதியயரையனன மல்லன் ஆனந்தனுக்கு .'( புது கோட்டை கல்வெட்டு -63).இக்கல்வெட்டு முத்தரையர் இனத்தை சேர்ந்தது .

மற்போர் செயும் வீரனை 'மல்லன் ' என அழைக்கபட்டது.மேலும் 'வளமானவன் ' என்ற அர்த்தத்தில் பயன்படுத்தபட்டது .


 அரசர்கள் தங்களது அரசியல் அதிகாரிகளுக்கு  காலிங்கராயர் ,மழவராயர் ,வாணராயர் ,இருங்கொளன்,காங்கேயன் ,வேணாடுடையான்,குருகுல ராயர் ,மூவேந்த வேளான்,வேளான்,பாண்டியனார் ,சேரமான் ,சோழனார்,தொண்டைமான்,பல்லவராயர்,   போன்ற பெயர்களை வழங்கி வந்தனர்.


 வேட்டுவ குல தலைவர்களுக்கு பட்ட பெயர்கள் (உடையார் ,வன்னியர் ,நயினார் ,கவுண்டர் ,முத்துராஜா ,தேவர் ) இருந்ததை கல்வெட்டுகள் கூறுகிறது .



No comments:

Post a Comment