Monday 5 November 2018

சங்க இலக்கியத்தில் மாந்தர்கள்

                                     சங்க இலக்கியத்தில் பரதவர்:
நெய்தல் நிலத்தில் வாழும் பொது மக்களின் பொது பெயரை குறிப்பதாக
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும் பூ கண்ணி குறவர் சூட
கானவர் மருதம் பாட அகவர்
நீல் நிற முல்லை பல் திணை நுவல (பொரு 218-221)

என்ற அடிகளில் அமைத்துள்ளது .
பரதவர் நெய்தல் நிலத்தில் வாழ்பவராகவும் ,மீன் பிடிக்கும் தொழில் செய்பவராகவும் குறிப்பதாக
கானல் அம் சிறுகுடி கடல் மேம் பரதவர்/நீல் நிற புன்னை கொழு நிழல் அசைஇ - நற் 4/1,2
மீன் எறி பரதவர் மகளே நீயே - நற் 45/3
உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர்/மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் - நற் 63/1,2
மீன் எறி பரதவர் மட_மகள் - நற் 101/8
மீன் கொள் பரதவர் கொடும் திமில் நளி சுடர் - அகம் 65/11
இரு நீர் பரப்பின் பனி துறை பரதவர்/தீம் பொழி வெள் உப்பு சிதைதலின் சினைஇ - அகம் 366/6,7
கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து என - அகம் 70/1
என்ற அடிகளில் அமைத்துள்ளது .
பரதவர் குடியை சார்ந்தவரை குறிப்பதாக
பரதவர் மகளிர் குரவையோடு ஒலிப்ப - மது 97
என்ற அடிகளில் அமைத்துள்ளது .


                                          சங்க இலக்கியத்தில் எயினர்
எயினர் என்ற சொல் பாலை நில பொது மக்களின் பொது பெயரை குறிக்கும் .

வேட்டுவ குடியை சேர்ந்தவர்களை குறிப்பதாக
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் - அகம் 319/3
கடும் பரி குதிரை ஆஅய் எயினன்/நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு என - அகம் 148/7,8
ஆஅய் எயினன் வீழ்ந்து என ஞாயிற்று - அகம் 181/7
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்/அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை - அகம் 208/5,6
ஆஅய் எயினன்/இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி - அகம் 396/4,5
வண் கை எயினன் வாகை அன்ன - புறம் 351/6
கொடு வில் எயினர் கொள்ளை உண்ட - பட் 266
கொடு வில் எயின குறும்பில் சேப்பின் - பெரும் 129
கானமும் எயினர் கடமும் கடந்தால் - மது 11/79
இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும் - மது 12/10
வல் வில் எயினர் மன்று பாழ்பட்டன - மது 12/13
இட்டு தலை எண்ணும் எயினர் அல்லது - மது 12/20
எய் வில் எயினர் குலனே குலனும் - மது 12/94
வேய் வில் எயினர் குலனே குலனும் - மது 12/98
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன - மது 12/139
அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன் இது - மது 12/142
கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய் - மது 12/157
அருள் இல் எயினர் இடு கடன் உண்குவாய் - மது 12/161
வெடி பட வருபவர் எயினர்கள் அரை இருள் - மது 12/149
அற குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும்
கலை அமர் செல்வி கடன் உணின் அல்லது - மது 12/15,16
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர - மது 12/39
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன - மது 12/139
இள மா எயிற்றி இவை காண் நின் ஐயர் - மது 12/128
என்ற அடிகளில் அமைந்துள்ளது .

கள்வர் குடியை சேர்ந்தவரை குறிப்பதாக
'கொடு வில் எயினர் கோட் சுரம் படர' அகம் 79/14
என்ற அடிகளில் அமைந்துள்ளது .

குறவர் குடியை சேர்ந்தவர்களையும் குறித்தது.
புறநானூறு 157 வைத்து பாடலை பாடியவர் குறமகள் இளவெயினி. குறமகள் என்ற அடைமொழியிலிருந்து இவர் குறக்குலத்தைச் சார்ந்தவர் என்று தெரிகிறது. மலைவாழ் குறவர்கள் எயினர் என்றும் குறக்குலப் பெண்கள் எயினி என்றும் அழைக்கப்பட்டனர்.

களிறு தொடூஉ கடக்கும் கான்யாற்று அத்தம் - அகம் 137/௩
அர்த்தம் =பாலை நிலத்தில் இருந்த பாதை .கான் =முல்லை நிலம் (காடு )


                                                                 சங்க இலக்கியத்தில் கானவர்

காடுகளில் வாழும் பொதுமக்களின் பொது பெயரை குறிப்பதாக
கானவர் மருதம் பாட அகவர் - பொரு 220
என்ற அடிகளில் அமைந்துள்ளது .

வேட்டுவ குடியை சேர்ந்தவரை குறிப்பதாக
‘வெற்பு அயல் நண்ணியதுவே வார் கோல்
வல் வில் கானவர் தங்கை
பெரும் தோள் கொடிச்சி இருந்த ஊரே’ குறு 335/5-7
என்ற அடிகளில் அமைந்துள்ளது
பொருள் :
மலைக்குச் சற்று அப்பால் இருக்கிறது, நீண்ட அம்பினையும்,வலிய வில்லினையும் உடைய வேட்டுவரின் தங்கையாகிய பெரிய தோளினைக்கொண்ட நம் தலைவி இருந்த ஊர்
.

கள்வர் குடியை சேர்ந்தவரை குறிப்பதாக
கொடு வில் கானவர் கணை இட தொலைந்தோர்
படுகளத்து உயர்த்த மயிர் தலை பதுக்கை
கள்ளி அம் பறந்தலை களர்தொறும் குழீஇ( அகம் 231/5-7)
என்ற அடிகளில் அமைந்துள்ளது.

குறவர் குடியை சேர்ந்தவரை குறிப்பதாக
‘கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பிற்
றலை விளை கானவர் கொய்தனர்” - (ஐங்குறுநூறு 270)
‘கானவர்
கரிபுனம் மயக்கிய அகன்காட் கொல்லை
ஐவனம் வித்தி மையுறக் கவினி
ஈனல் செல்லா ஏனற்கிழுமெனக்
கருவி வானம் தலை இ” (புறநானூறு 159)
'தலை விளை கானவர் கொய்தனர் பெயரும்' - (ஐங் 270/2 )
'துறு கண் கண்ணி கானவர் உழுத' - நற் 386/2
'பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை
அரும் குறும்பு எறிந்த கானவர் உவகை மலை' 317,318
'பழம் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு' - குறு 379/2
என்ற அடிகளில் அமைந்துள்ளது .

கிழங்கு சேகரிக்கும் தொழில் செய்பவரை குறிப்பதாக
அன்னாய் வாழி வேண்டு அன்னை கானவர்/கிழங்கு அகழ் நெடும் குழி மல்க வேங்கை - ஐங் 208/1,2
'இன்று யாண்டையனோ தோழி குன்றத்து
பழம் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு' குறுந் 379/1,2
என்ற அடிகளில் அமைத்துள்ளது .

வேட்டை (வேட்டம்) தொழில் செய்பவரை குறிப்பதாக
'உரைமதி உடையும் என் உள்ளம் சாரல்
கொடு வில் கானவன் கோட்டு மா தொலைச்சி' நற்றிணை 75/5,6
'வாரற்க தில்ல தோழி சாரல்
கானவன் எய்த முளவு_மான் கொழும் குறை
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு
காந்தள் அம் சிறுகுடி பகுக்கும்
ஓங்கு மலை நாடன் நின் நசையினானே '
நற்றிணை 85/7-11
'பெரு மலை சிலம்பின் வேட்டம் போகிய
செறி மடை அம்பின் வல் வில் கானவன்
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன்' அகம் 282/1-4
என்ற அடிகளிலும் அமைத்துள்ளது .


                                         சங்க இலக்கியத்தில் மழவர்
சங்க இலக்கியத்தில் மழவர் என்ற சொல் குடிபெயர் கிடையாது .

போர் வீரர்களை குறிப்பதாக
‘…………..வெம் போர்
மழவர் பெருமகன் மாவள் ஓரி’ நற் 52/8-9
வீளை அம்பின் விழு தொடை மழவர்/நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து - அகம் 131/6,7
வார் கழல் பொலிந்த வன்கண் மழவர்/பூ தொடை விழவின் தலை நாள் அன்ன - அகம் 187/7,8
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை - பதி 21/24
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை - பதி 55/8
என்ற அடிகளில் அமைந்துள்ளது .

வெட்சி வீரர்களையும் ,கரந்தை வீரர்களையும் மழவர் என்று சங்க இலக்கியத்தில் பல இடங்களில் அழைக்கபட்டனர் .

களவு தொழில் செய்ததை குறிப்பதாக
".....இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக்
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்....."(அகம்.91)
பொருள்: கரிய நிறமுடைய இரலை மான்கள் உறங்கும் பாறாங்கற்களால் ஆன உயர்ந்த கற்குவியலில் அஞ்சாமை உடைய மழவர் பசுக்களை களவு செய்வதற்கு உதவியாய் வளர்ந்து நீண்ட அடியை உடைய ஆசினிப் பலவின் மரங்களை உடைய ஊர்.
"....கண நிரை அன்ன, பல் கால் குறும்பொறை
தூது ஒய் பார்ப்பான்.........
................
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்....."(அகம்.337)
பொருள்: உப்பு வணிகர் கூட்டமாகச் செல்லும் கழுதை வரிசை
போன்று விளங்கும் பாறைகளின் வழியே பல முறையும் தூதாகப் போகும் பார்ப்பான், வெண்மையான ஓலைச் சுருட்டுடன் வரும் இயல்பைப் பார்த்து, உண்ணாமையால் வாட்டம் கொண்ட விலாவுடைய ‘இவன் கையில் இருப்பது பொன்னாகவும் இருக்கக் கூடும்’ என்று எண்ணி, கையில் படைக்கருவியை உடைய மழவர் பயன் ஏதும் இல்லாமல் கொன்று வீழ்த்தினர்.
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை -அகம் 121/11-12
என்ற அடிகளில் அமைந்துள்ளது.


                                                     சங்க இலக்கியத்தில் மறவர்
சங்ககாலத்தில் மறவர் ,மறம் சொற்கள் வீரம் ,கொலை தொழில் புரிபவர் ,படை வீரர் போன்ற அர்த்தத்தில் பயன்படுத்த பட்டுள்ளது .சங்ககாலத்தில் மறவர் என்ற சொல் இனத்தை குறிக்க வில்லை .

வீரத்தை குறிப்பதாக
மறம் பாடிய பாடினியும்மே - புறம் 11/11
என்ற அடிகளில் அமைந்துள்ளது .

போர் வீரர்களை குறிப்பதாக
தினை கள் உண்ட தெறி கோல் மறவர்/விசைத்த வில்லர் வேட்டம் போகி - அகம் 284/8,9
நல் இசை நிறுத்த நாண் உடை மறவர்/நிரை நிலை நடுகல் பொருந்தி இமையாது - அகம் 387/14,15
நல் அமர் கடந்த நாண் உடை மறவர்/பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும் - அகம் 67/8,9
வில் ஏர் வாழ்க்கை விழு தொடை மறவர்/வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்மார் - அகம் 35/6,7
விழுதொடை மறவர் வில்இட தொலைந்தோர்
எழுத்து உடை நடுகல் அன்ன விழு பிணர்- ஐங் 352/1-2
தேர்வண் கிள்ளி தம்பி வார்கோல்
கொடுமர மறவர் பெரும (புறம் 43)
என்ற அடிகளில் அமைந்துள்ளது .

படைத்தலைவர்களை குறிப்பதாக
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்/குழியில் கொண்ட மராஅ யானை - அகம் 13/6,7
வானவன் மறவன் வணங்கு வில் தட கை - அகம் 77/15
இழை அணி யானை சோழர் மறவன்/கழை அளந்து அறியா காவிரி படப்பை - அகம் 326/9,10
பெருந்தகை மறவன் போல கொடும் கழி - நற் 287/4
மீளி மறவனும் போன்ம் - கலி 104/50
என்ற அடிகளிலிலும் அமைந்துள்ளது .
சங்க இலக்கியத்தில் வெச்சி வீரர்களையும் ,கரந்தை வீரர்களையும் மறவர் என்று பல இடங்களில் கூறப்பட்டு உள்ளது .

ஆறலை கள்வர்களை குறிப்பதாக
அத்தம் நண்ணி அதர்பார்த் திருந்த
கொலைவெம் கொள்கை கொடும்தொழில் மறவர்
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த
எஃகுறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய- அகம் 363/9-12
என்ற அடிகளிலும்
அத்தம் நண்ணி அதர்பார்த்திருந்த - காட்டினை அடைந்து அங்க வழிவருவாரைப் பார்த்துக்கொண்டிருந்த, கொலைவெம் கொள்கை கொடுதொழல் மறவர் - கொலையை விரும்பும் கோட்பாட்னையும் கொடிய தொழலையுமுடைய மறவர், ஆறு செல் மாக்கள் அருநிறத்து எறிந்த-வழிச்செல்லும் மக்களது அரிய மார்பிலே எறிந்த, எஃகு உற விழு புண் கூர்ந்தோர் எய்திய-வேலாலுற்ற சிறந்தபுண்ணை மிகக் கொண்டு பட்டோரை அடைந்த.
அத்தம் என்ற சொல் பாலை நிலத்தில் இருந்த பாதையை குறிக்கும் (ஐங் 351 /1 -3 )
‘ …………………… என்றும்
கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர்
ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்த
படு முடை பருந்து பார்த்து இருக்கும்
நெடு மூது இடைய நீர் இல் ஆறே ‘குறு 283/4-8
என்ற அடிகளிலும்
எக்காலத்திலும் கூற்றுவனைப் போன்ற கொலைத்தொழிலையுடைய வேலைக் கொண்ட மறவர் வழியில் இருந்து தங்கி வழிச்செல்வோரைக் கொன்றதனால் உண்டான அழுகியபுலாலைப் பருந்துகள் எதிர்நோக்கி இருக்கும் நீண்ட பழைய இடங்களிலுள்ள நீர் இல்லாத வழியில்
‘நெடும் கழை திரங்கிய நீர் இல் ஆரிடை
ஆறு செல் வம்பலர் தொலைய மாறு நின்று
கொடும் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்
கடுங்கண் யானை கானம் நீந்தி’ குறு 331/1-4
என்ற அடிகளிலும்
நெடிய மூங்கில் வாடி உலர்ந்துபோன நீரற்ற அரிய பாலைவெளியில்
வழிச்செல்லும் பயணிகள் அழியுமாறு அவரை எதிர்த்து நின்று
வளைந்த வில்லையுடைய மறவர்கள் காட்டில் கொள்ளைப்பொருளைப் பகிர்ந்துகொள்ளும்
கடுமையான யானைகள் இருக்கும் பாலைநிலத்தைக் கடந்து
‘நிறை பெயல் அறியா குறைத்து ஊண் அல்லில்
துவர் செய் ஆடை செம் தொடை மறவர்
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறி இடை
இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல்’ நற் 33/5-8
என்ற அடிகளிலும்
நிறைந்த மழையை அறியாத, குறைந்த உணவையுடைய இரவினில்
பழுப்பேறிய ஆடையையுடைய, செம்மையாக அம்பினைத் தொடுத்திருக்கும் மறவர்கள் வழியைப் பார்த்து அமர்ந்திருக்கும் அஞ்சத்தக்க பாதையினில் செல்ல எண்ணுகிறார் அவர் என்றால் அதை மறுப்பதற்கு
‘விடு கணை வில்லொடு பற்றி கோடு இவர்பு
வருநர் பார்க்கும் வன்கண் ஆடவர்’குறுந்தொகை-274/3,4
என்ற அடிகளிலும் அமைந்துள்ளது .
விடுவதற்கான அம்பினை வில்லோடும் கையினில் பற்றி, அந்த மரத்தின் கிளைகளில் ஏறி வழியில் வருவோரைப் பார்க்கும் கொடுமைமிக்க ஆடவர்(மறவர் ).

வீரத்தை குறிப்பதாக
வழங்கு வில் தடகை மறகுடி தாயத்து - மது 12/6
மறகுடி தாயத்து வழி வளம் சுரவாது - மது 12/14
வாள் ஏர் உழவன் மற களம் வாழ்த்தி - வஞ்சி 26/234
மற தகை நெடு வாள் எம் குடி பிறந்தோர்க்கு - வஞ்சி 25/124
மருவூர் மருங்கின் மறம் கொள் வீரரும் - புகார் 5/76
மறம் கொள் வய புலி வாய் பிளந்து பெற்ற - மது 12/27
மறம் மிகு வாளும் மாலை வெண்குடையும் - வஞ்சி 26/44
மறம் சேர் வஞ்சிமாலையொடு புனைந்து - வஞ்சி 26/56
மறம் கூர் நும் கோன் சொல் செய்தேன் மம்மர் நோயின் வருந்துகோ - சிந்தா:1 311/4
மாற்றம் உணர்ந்து மறம் கூர் கடல் தானை நோக்கி - சிந்தா:2 432/2
மாண்ட எயிற்று எகினம் மறம் இல்லது - சிந்தா:4 942/3
மறம் கொள் வெம் கதிர் வேலவன் வார் கழல் - சிந்தா:4 1034/1
மறம் கெழு பெரும் புலி வாயின் வண்ணமே - சிந்தா:6 1461/4
மாறு அன்மையின் மறம் வாடும் என்று இளையாரையும் எறியான் - சிந்தா:10 2261/3
குஞ்சி அம் குமரர் தங்கள் மறம் பிறர் கவர்ந்து கொள்ள - சிந்தா:10 2300/3
புல்லாளன் ஆக மறம் தோற்பின் என புகைந்து - சிந்தா:10 2319/2
மறம் புரி கொள் நெஞ்சம் வழியா புகுந்து ஈண்டி - சிந்தா:13 2868/2
என்ற அடிகளில் அமைத்துள்ளது .

வீரர்களை குறிப்பதாக
நெடும் தேர் ஊருநர் கடும் கண் மறவர்
இருந்து புறம் சுற்றிய பெரும் பாய் இருக்கையும் - புகார் 5/55,56
வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து - மது 22/13
கறை தோல் மறவர் கடும் தேர் ஊருநர் - வஞ்சி 26/198
சிலை தோள் மறவர் உடல் பொறை அடுக்கத்து - வஞ்சி 26/206
புறம்பெற வந்த போர் வாள் மறவர்
வருக தாம் என வாகை பொலம் தோடு - வஞ்சி 27/42,43
வாய் வாள் மறவரும் வாள் வலன் ஏத்த - வஞ்சி 26/77
பீடு கெழு மறவரும் பிறழா காப்பின் - வஞ்சி 26/87
கள் விலை_ஆட்டி மறுப்ப பொறா மறவன் கை வில் ஏந்தி - மது 12/124
வஞ்சம் மறவர் நிரை வள்ளல் விடுத்தவாறும் - சிந்தா:0 11/2
அம்பு கொண்டு அரசர் மீண்டார் ஆ கொண்டு மறவர் போனார் - சிந்தா:2 439/3
வடி நுனை ஒளிறும் மாலை வாள்படை மறவர் சூழ - சிந்தா:3 701/3
மாயம்-கொல் மறவர் மாலை பைம் தலை உதிர்ந்த செம் கண் - சிந்தா:3 788/3
கரும் சிலை மறவர் கொண்ட கண நிரை விடுக்க வல்ல - சிந்தா:4 1112/1
சால தீ சவரர் கோலம் செய்து நம் மறவர் ஈண்டி - சிந்தா:4 1141/2
வஞ்சம் இல் மறவர் வாள் மிளிர்ந்து பாய் குருதியுள் - சிந்தா:7 1828/2
ஆகம் மறவர் அகன் கோயில் புக்கு அம் பொன் மாலை - சிந்தா:11 2337/2
உடை திரை பரவை அன்ன ஒளிறு வேல் மறவர் காப்ப - சிந்தா:13 2650/3
தூ திரள் சுறா இனம் தொக்க போல் மறவரும்
ஏத்தரும் சிலை கை வாள் இலங்கு வேல் ஏந்தினார் - சிந்தா:7 1845/3,4
சென்ற வேல் விருந்து செம் கண் மறவன் நக்கு எதிர்கொண்டானே - சிந்தா:10 2289/4
என்ற அடிகளில் அமைத்துள்ளது .


                       வேட்டுவ குடியினர் முல்லை (பாலை ) நிலத்தில் வாழ்ந்தவர்கள்

"காந்தள் அம் கண்ணி கொலை வில் வேட்டுவர்
செம் கோட்டு ஆமான் ஊனொடு காட்ட
மதன் உடை வேழத்து வெண் கோடு கொண்டு
பொன் உடை நியமத்து பிழி நொடை கொடுக்கும்
குன்று தலைமணந்த புன்புல வைப்பும்" (பதி 30/ 9-13)

உரை :
காந்தள் பூவால் தொடுக்கப்பட்ட தலைமாலையினையும், கொலைபுரியும் வில்லினையும் கொண்ட வேட்டுவ குடியினர்
செம்மையான கொம்பினையுடைய காட்டுப்பசுவின் இறைச்சியோடு, காட்டிலுள்ள வலிமையுடைய யானைகளின் வெண்மையான தந்தங்களையும் எடுத்துக்கொண்டு, அவற்றைப் பொன்னை உடைய கடைத்தெருக்களில் கள்ளுக்கு விலையாகக் கொடுக்கும் குன்றுகள் கூடிக்கிடக்கும் புன்புலமாகிய பாலைநில ஊர்களின் மக்களும் .(புன் புலம் -முல்லை ).
'கான் உறை வாழ்க்கை கத நாய் வேட்டுவன்
மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய'- (புறம் 33/1-3)
காட்டில் வாழும் வாழ்க்கையுடைய ,சினமுள்ள நாயையும் உடைய வேட்டுவ குடியை சேர்ந்த ஒருவன் மான் தசைகளை கொண்டு வருவர் இடைச்சியர் தயிரை குடங்களில் கொண்டு வருவர்.
வேட்டுவ குடியினர் முல்லை நிலத்தில் (காடு =கான் ) வாழ்ந்தார்கள் என்பதை இச் செய்யுள் கூறுகிறது .
' ......................................... .வெவ்வினை
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ' - (அகம் 387/8-9)
கடுமையான வினைகளையுடையரும்(போர் தொழில் ),காடுகளில் தங்கிக்கிடப்பாருமாகிய வேட்டுவ குடியினரின் கூப்பீட்டைக் கேட்டு அஞ்சி ..
வேட்டுவ குடியினர் முல்லை நிலத்தில் (பாலை ) வாழ்ந்தார்கள் என்பதை இச் செய்யுள் கூறுகிறது .
சிலப்பதிகாரம் வேட்டுவ வரி வேட்டுவ குடியினரை எயினர் குலம் என்றும் தொல்குடியினர் என்றும் கூறுகிறது .
நாட்டுப்புற மாக்களும் வேட்டுவ தலைவரும்
குறும்பருங் .......' பெருங்கதை ,உஞ்சை காண்டம் (வரி 54 -55)
காட்டில் வாழும் வேட்டுவ குடி தலைவரும் ,வேட்டுவ குடி தலைவரின் வீரர்கள் ...
வேட்டுவ குடி தலைவரின் வீரர்களை குறும்பர் என்று கூறுவதால் வேட்டுவ குடி தலைவர் எயினர் என்பதையும் அவர் வீரர்கள் எயினர் என்பதையும் உறுதிப்படுத்துகிறது .
'காட்டகத் துறையும் கடு வினை வாழ்க்கை
வேட்டுவர் பயின்ற விடமற் றிந்நிலம் 'பெருங்கதை ,உஞ்சை காண்டம் (வரி 107 -108)
காட்டில் வாழ்ந்து வருபவரும் கடுமையான தொழில்கள் செய்யும் வாழ்க்கை உடைய வேட்டுவ குடியினர் வில் பயிற்சி மூலம் பயின்ற நிலம் .
'ஆய்வேளையும் குறும்பரையும் மடல் மாரு யளித்தோட்டி காட்டு குறும்பு சென்றடைய நாட்டு குறும்பில் செரு வென்று '
(வேள்வி குடி செப்பேடு ).
ஆய்வேளின் வீரர்களை குறும்பர் என்று கூறுவதால் ஆய்வேள் எயினர் என்பதையும் அவர் வீரர்கள் எயினர் என்பதையும் உறுதிப்படுத்துகிறது .எயினர்களின் அரணை குறும்பு என்று அழைக்க படும் (அகம் -319 /13)
காட்டில் வேட்டுவ குடியை சேர்ந்தவர்களின் பாசறை :
'கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி
வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட
இடு முள் புரிசை ஏமுற வளைஇ
படு நீர் புணரியின் பரந்த பாடி' (முல்லை பாட்டு-24 -28 )
காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டினில்,நெடுந்தொலையும் மணக்கும் பிடவ மலரோடு (ஏனைப்)பசிய தூறுகளையும் வெட்டி, வேட்டுவரின் சிறு வாயில்களையுடைய அரண்களை அழித்து, காட்டிலுள்ள இடுமுள்ளாலான மதிலைக் காவலுறும்படி வளைத்து,ஒலிக்கின்ற கடலலை போல் பரந்த பாசறை .

Wednesday 20 June 2018

வேட்டுவர் இனத்துக்கும் ,கொங்கு வேளாள இனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை

வேட்டுவர் இனத்துக்கும் ,கொங்கு வெள்ளாளர் இனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை


வேட்டுவர் இனத்துக்கும் ,கொங்கு வெள்ளாளர் இனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது .


வெள்ளாளர் (கொங்கு வெள்ளாளர் ) இனத்தை பற்றிய கல்வெட்டுகள் :


'வேளாண் மாந்தருக்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப் பிறவகை நிகழ்ச்சி '(மரபியல் 81)
வேளாண் மாந்தருக்கு(வெள்ளாளர் ) உழவு தொழில் தவிர மற்ற தொழில் எதுவும் இல்லை என சங்க இலக்கியம்கள் கூறுகிறது .
'கழகத்தால் வந்த பொருள்கள் முறாமை
பழகினும் பார்பாரை தீப்போல ஒழுகழ
உழவின்கட் காமுற்று வாழ்தலி மூன்றும்
அழகென்ப வேளாண் குடிக்கு 'திரி 42
'வேளாண் வாயில் கேட்ப கூறி (பொருந 75)
வேளாண் -உபகாரம்
வேளாண் என்ற சொல்லில் இருந்து 'வெள்ளாளர் 'வேளாளர்' என்று சொல் வந்தது .

'...பூவாணிய நாட்டு ஆவணி பேரூரில் வெள்ளாளன் பிள்ளர்களில் சொக்கன் ..'
(ஈரோடு,தொண்டீஸ்வரர் கோயில் ,கிபி 10)
'..கொற்றமங்கலத்தில் இருக்கும் வெள்ளாளன் பைய்யரில் பறையன் பறையனேன் ஆளுடையார் வில்லிஸ் வரமுடையருக்கு ..'
(கோவை ,இடிகரை ,வீர பாண்டியன் (கிபி 1261-1288)
'...காங்கேய நாட்டு கரை ஊரில் வெள்ளாளன் மனியர்களில் அல்லால பெருமாள் இட்ட தூண் ..'
(காங்கேயம் கல்வெட்டு ,கிபி 1448)
'...கவையன்புத்தூரில் இருக்கும் வெள்ளாளன் பிள்ளந்தை குலத்தில் பெரிய காளியப்பா கவுண்டர் ..'
(அவினாசி கல்வெட்டு ,கிபி 1648)
'...செம்பூத்த குல மானிக்கி தெய்வானை உபயம் '
(காங்கேயன் ,ஊதியூர் ,கிபி 1853)
செம்பூத்த குலம்- வெள்ளாளர்
மானிக்கி -தேவரடியாள் (புதுகோட்டை கல்வெட்டுகள் 817 'மானிக்கி' என்றால் 'தேவரடியாள்' என்று கூறுகிறது )

பெருங்குடி செப்பேடு,தூரன் குல செப்பேடு,பொட்டு கட்டி விட்ட செப்பேடு இந்த செப்பேடுகள் கொங்கு வெள்ளாளர் வெள்ளாள பெண்களை பொட்டு கட்டி விட்டதை பற்றி கூறுகிறது.பொட்டு கட்டி விடும் என்னும் தேவதாசி முறை சட்டம் இயற்றி இந்த முறையை ஒழித்தார்கள்.கொங்கு நாட்டில் தேவரடியாள் குறித்து பல கல்வெட்டுகள் இருக்கிறது.

'சேர குல வெள்ளாளர்கள் பிள்ளையென்ற பட்டங்கொண்டவர்களாக வாழ்ந்து இருக்கிறார்கள் .ஆனால் அவர்களின் தலைமையானவர்கள் கவுண்டன் என்னும் பெயர் புனைவது வழக்கமாம் .இப்பொழுதும் கவுண்டன் பிராமணபிள்ளை என்பது போல் வழக்கம் '
(கொங்கு நாடு அடைவு இயல் -தி அ முத்துசாமி கோனார் ) .

'..ஸ்வஸ்தி ஸ்ரீ வல்லாள தேவர் திரு ராச்சியம் பண்ணியருளா நின்ற நள வருசத்து வட பரிசார நாட்டு இடிகரையில் வெள்ளாளன் கொற்றந்தைகலில் பிள்ளையாண்டி கொக்கண்டன்தேவர் என் தன்மம் '
(,போசளர் ஆட்சி (வல்லாள தேவர்),கோவை இடிகரை,கிபி 13)
பிள்ளை( அந்தப்புறத்துக்கு பிறந்தவர்) என்ற பட்ட பெயர் இருந்ததை இக்கல்வெட்டு கூறுகிறது .

'கொங்கு வெள்ளாளர் முறையான கொங்கு வெள்ளாளர் ,தொண்டன் அல்லது இளகன்பன் கூட்டம் என்ற இரண்டு அகமண கட்டுப்பாடு உடைய பிரியுகளாக பிரிக்கபட்டு உள்ளது .பின்னவர் இச்சாதி பெண்களும் ,கைம்பெண்களும் வேறு சாதியோரோடு கொண்ட முறைஅற்ற உறவின் காரணமாக பிறந்தவர்கள் '
(தென்இந்தியா குடிகளும் குலங்களும் தொகுதி -3)

வெள்ளாளர்களின் (கொங்கு வெள்ளளாளர் ) வரலாற்று திருட்டு .

வேட்டுவர் இனத்துக்கும் , வெள்ளாளர் இனத்துக்கும்(கொங்கு வெள்ளாளர் ) கூட்ட பெயர்கள் ஒன்றாக இருப்தை பயன்படுத்தி வெள்ளாள சாதினர் ,வேட்டுவ இன வரலாறுகளை திருடி கொள்கிறார்கள் .

'...இப்படிக்கு பூந்துறையில் வெள்ளாளன் மேலைசாகாடைகளில் அப்பியன் எழுத்து..இப்படிக்கு எழுமாத்தூரில் வெள்ளாளன் பனகாடர்களில் பெரியன்ன காகுதார் எழுத்து..இப்படிக்கு குலவிளக்கில் பண்டி வேட்டுவரில் புலிகுத்தி தேவன் எழுத்து...இப்படிக்கு அறைச்சலூரில் கரைய வேட்டுவரில் குன்றிடர் எழுத்து..இப்படிக்கு குழாநிலையில் வெள்ளை வேட்டுவரில் நல்லண்ணன் எழுத்து ..,
(1967-68:231,கிபி 16,வீர நஞ்சராயர் ,பெருந்துறை கல்வெட்டு )

'..சோழியன் கரை ஒன்றுக்கும் அந்துவ வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் மேற்படி நச்சுளி வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் குறுங்காடை வேட்டுவரில் சின்னன் கரை ஒன்றுக்கும் வெள்ளாளன் தனிஞ்சிகளில் தயாண்டர் கரை ஒன்றுக்கும் ..'
(ARE No-226 of 1968, ஈரோடு கல்வெட்டு ,கிபி 1538,திருமலை நாயக்கர் )
இக்கல்வெட்டு
அந்துவ வேட்டுவர் -அந்துவ வேட்டுவ கூட்டம்
நச்சுளி வேட்டுவர் - நச்சுளி வேட்டுவ கூட்டம்
குறுங் காடை வேட்டுவர் -குறுங் காடை வேட்டுவ கூட்டம் (குறும்பூழ் -காடை)
தனிஞ்சி வெள்ளாளர் - தனிஞ்சி வெள்ளாள கூட்டம்
போன்ற கூட்ட பெயர்களை கூறுகிறது .
'...வெள்ளாளன் அந்துவரில் செய கரிவான்டரும் ..'
(காங்கேயம் கல்வெட்டு ,கிபி 1537,விஜய நகர் ஆட்சி )

இன்று காடை வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .காடை வேட்டுவர்களின் குல தெய்வம் கொங்கலம்மன் (பெரிய புலியூர் ,ஈரோடு ) இன்று காடை குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று காடை குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு காடை வேட்டுவ குலமும் ,காடை வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது .

இன்று அந்துவ வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .அந்துவ வேட்டுவர்களின் குல தெய்வம் பத்ரகாளியம்மன் (அந்தியூர் ,ஈரோடு ) இன்று அந்துவ குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று அந்துவ குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு அந்துவ வேட்டுவ குலமும் ,அந்துவ வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது . இது தான் உண்மை .

இது போலத்தான் மற்ற குலங்கள். இந்த உண்மையை வெள்ளாளர்கள் மறைத்து ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் .

 வேட்டுவருக்கு பணிசெய்த மக்கள் வெள்ளாளர்கள்(கொங்கு வெள்ளாளர் ).

கச்சி(காஞ்சி) ஏகாம்பரர் கோயில் கல்வெட்டு ஓன்று  வேட்டுவருக்கு பணிசெய்த மக்கள் பற்றி கூறுகிறது .

"தொண்டை மண்டல வரிசை மூவாறு குடிமக்கள் சுருதிநாள் முதலாகவே துங்கமிகு நாவிதன் குயவன் வண்ணான் ஓலை சொன்னபடி ஒச்சன் கண்தகம் மாலர்வகை ஐவர் வாணியர் மூவர் கந்தமலர் மாலைகாரர்  கலைமீது சார் ஓட்டும் பாணன் தலைகாவல்புரி பள்ளி வலையன் பண்டுமுதல் ஊரன் மரிக்கும் இடையன் விருது பலகூறும் வீர முடையான் பதிநென்குடி மக்கள் அனைவரும்  வேட்டுவர் பனிசெய்து பல முறைமையும் கொண்டு
பரிவட்டமும் கட்டியே வருவர் இக்குவலைய மதிக்கவேதான் கூறரிய கச்சிவாழ் ஏகாம்பரர் ஆலய குமததில் இத்த லிபியே"

பண்டுமுதல் ஊரன் - உழவர்(கொங்கு வெள்ளாளர் ).

Friday 16 February 2018

வேட்டுவ குடிக்கும் (வேட்டுவ கவுண்டர் ),பள்ளி குடிக்கும் (வன்னியர் ) எந்த தொடர்பும் கிடையாது .

வேட்டுவ குடிக்கும் ,பள்ளி குடிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதை கல்வெட்டுகளும்,செப்பேடுகளும் உறுதிப்படுத்துகிறது .

பள்ளி இனத்தை பற்றிய கல்வெட்டுகள் :

'..காடந்தைகள் சேவகன் புதுபள்ளிகளோடு பொருதளன்று பட்டா நெருமெதிகாரி'
(மகேந்திரவர்மன் 5 ஆவது ஆட்சி ஆண்டு ,கி பி 605,தருமபுரி)

'..தகடூர் நாட்டு கங்க நாட்டு புல்லமங்கலத்து பாண்டிகாமுண்டர் பள்ளியில் கேலியர் மாச்சகாமுண்டன் மகன் விச்சிகாமுண்டன் வேட்டையில் பன்றி குத்திபட்டான் அவர் ..'
(ராஜேந்திர சோழன் 2,கி பி 1067,பன்றி குத்திபட்டான் கோவில், தருமபுரி )

'.. கங்க நாட்டு தகடூர் நாட்டு புல்ல மங்கலத்தில் பாண்டிகாமுண்டர் பள்ளியில் இருக்கும் வெள்ளாளன் நொலுபுலன் பாலகாமுண்டன் மகன் புளியனஞ்ய வீரோ...புளிசயகுச்சியில் பொருதுபட்டான்'
(ராஜேந்திர சோழன் 2,கி பி 1052,பன்றி குத்திபட்டான் கோவில், தருமபுரி )

'..குறுக்கையில் காணியுடைய பள்ளிகளில் பாண்டியன் சொக்கன் மரகத சோழ முத்தரையன் ..'
(1913:35,கி பி 13,செஞ்சி வட்டம் )

'..ஆமூரில் இருக்கும் பள்ளி ஆம்மூரி பிச்சநாத ராஜேந்திர சோழ நீலகங்கயரையன்.'
(1918:159,கி பி 12,)

'..பனைகுளத்து பள்ளியில் பள்ளிகாரன் புளியகாமுண்டன் மகன் வசவகாமுண்டர் மகன் நாடம..'
(ராசாதிராசா சோழனின் 27 ஆவது ஆட்சி ஆண்டு ,கி பி 1045,தருமபுரி )

'..வில்வீர பராகிரமனான ருத்திர பள்ளியார் குமாரராகிய நீலகங்கன் .'
(பன்னட்டார் பட்டயம் ,கி பி 1633)

'... குடிபற்று ஆயத்துக்கு கடவ நீர்பழனி உடையான் மொண்ணை பள்ளி விசையாலைய விழுபரையனும் படைபற்று ஆயத்துக்கு கடவாரும் ..'
(PSI-583,குளத்தூர் தாலுகா ,குலசேகரனின் 33 ஆவது ஆட்சி ஆண்டு ,கி பி 1301)

'..மேற்படியூர் பள்ளி பொன்னான தன்மராஜன் எழுத்து..'
(PSI-158,குளத்தூர் தாலுகா ,குலோத்துங்க சோழனின் 17 ஆவது ஆட்சி ஆண்டு ,கி பி 12).



'பள்ளிகள்' சோழர் காலத்தில் படை வீரர்களாக பழக்கபட்டார்கள் (Noboru Karashima,south indian history and society,p.30) பின்னாளில் நாட்டுகாவல் வீரர்களாக நிறுத்தபட்டார்கள் .இவர்கள் மறவர் குடியாகையால் படைக்கு கொண்டு வர பட்டனர் எனலாம் .பல்லவர் காலத்தில் மாட்டு மந்தைகளை பாதுகாக்கும் மறவர்களாக விளங்கினர்.

பங்களர்,பள்ளி போன்ற பழங்குடிகள் சங்க இலக்கியங்களில் பேச படாதவர்கள்.காவிய காலம் முதல் இலக்கியத்திலும் கல்வெட்டுகளிலும் மிகுதியாக பேசபடுகின்றன.' (தொல்குடி-வேளிர்-அரசியல்)


ராஜா வாய்க்காலை வெட்டுவதற்காக தொழிலாளர்கள் ,வேறு பகுதியில் இருந்து குடி பெயர்ந்து நஞ்சை இடையாற்றில் குடியேறிய வன்னிய சமுதாயத்தினர் ஆவார்கள் என சேலம் களஞ்சியம் (பக்கம் -93) குறிபிடுகிறது.



பள்ளிகள் என்போர் யார்? பூர்வீகம் குறித்த சர்ச்சை பண்டைய தமிழ் நிகண்டுகளில் பள்ளிகள் என்ற மக்கள் பிரிவு பற்றிக் கூறப்படவில்லை. ஆனால்,பள்ளி என்றால் முல்லை நிலக்குடியிருப்பு என்று கூறப்பட்டிருக்கிறது.
பாட்டும் தொகையும் என்ற நூலில்(பக்கம் 116,நியூ செஞ்சுரி வெளியீடு) பள்ளி என்பதற்குஇடம்,சாலை,இடைச்சேரி எனவும், ‘பள்ளி அயர்ந்து’ என்பதற்கு நித்திரை செய்தல் எனவும் ‘பள்ளி புகுந்து’ துயில் கொண்ட தன்மை எனவும் பொருள் தருகின்றது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி எழுந்த நெடுநல்வாடை செய்யுள்(186) ‘நள்ளென் யாமத்துப் பள்ளி கொண்டான்’ என்பதில் வரும் பள்ளி என்பது துயில் அல்லது நித்திரை கொள்தல் எனப் பொருள்படுகிறது.
சரி முல்லை நிலக்குடியிருப்பு என நிகண்டுகள் கூறும்போது, அதே நிகண்டு முல்லை நில மக்களை அண்டர்,இடையர்,ஆயர்,ஆய்ச்சியர்,கோவலர்,பொதுவர்,பொதுவியர் மற்றும் குடத்தியர் என்று கூறுகிறது. இதன்மூலம், பள்ளி என்போர் முல்லை நில மக்கள் இல்லை என்பதாகிறது.
மலைபடுகடாம் செய்யுள்(451) ‘மண்ணும் பெயர்தன்ன காயும் பள்ளியும்’ என்பதில் வரும் பள்ளி என்பது சாலை எனப் பொருள்படுகிறது.
சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் தொண்டைமான் இளந்திரையன் மேல் பாடிய பெரும்பாணாற்றுப்படைச் செய்யுள்:
".....முல்குடைப் பெருவழிக் கவலை காக்கும் வில்லுடை வைப்பின் வியன்காட் டியவி னீளரை யிலவத் தலங்குசினை பயந்த பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன வரிப்புற வணிலொடு கருப்பை யாடா 85
தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல் வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தக ரீத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி ஈன்பிண வொழியப் போகி நோன்கா 90
ழிரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோ லுளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி யிருநிலக் கரம்பைப் படுநீ றாடி நுண்பு லடக்கிய வெண்ப லெயிற்றியர் பார்வை யாத்த பறைதாள் விளவி 95...."
விளக்கம்: 83-88 : நீளரை யிலவத்து .............. குரம்பை
கருத்துரை : நீண்ட அடியினையுடைய இலவமரத்தின் அசைகின்ற கொம்புகள் காய்த்த பஞ்சினையுடைய அழகிய பசிய காய், முதிர்ந்து முதுகிலே விரிந்து பஞ்சு தோன்றினாற் போன்ற வரியை முதுகிலே உடைய அணிலோடே எலியும் திரியாதபடி, யாற்றின் அறலையொத்த முதுகினையும், கொழுவிய மடலினையும் உடையதும், வேல்போலும் நுனி பொருந்தியதுமாகிய ஈந்தின் இலையாலே வேயப்பட்ட நெடிய முகட்டையும், எய்ப்பன்றியின் முதுகுபோன்ற புறத்தினையும் உடைய குடிலின்கண் என்பதாம்.
எயிற்றியர் செயல்
89-97 : மான்றோல் ............... உலக்கையோச்சி
கருத்துரை : மான்றோற் படுக்கையிலே பிள்ளையோடு முடங்கிக் கிடக்கும் ஈன்ற எயிற்றியை ஒழிய ஒழிந்தோரெல்லாம் போய், பூண்கட்டிய சீரிய கோல் செருகப்பட்ட உளிபோலும் வாயையுடைய பாரைகளாலே கரிய கரம்புநிலத்தைக் குத்திக் கிளறிப் புழுதியை அளைந்து நுண்ணிய புல்லரிசியினை வாரிக்கொண்ட வெள்ளிய பல்லை யுடைய எயினர் மகளிர், பார்வைமான் கட்டிநின்ற தேய்ந்த தாளினையுடைய விளவின் நீழலையுடைய தம் முற்றத்தே தோண்டப்பட்ட நிலவுரலிலே அப் புல்லரிசியைச் சொரிந்து குறிய வயிரமேறிய உலக்கையால் குற்றி என்பதாம்.
இந்தப் பாடலிலும் பள்ளி என்றால் படுக்கை என்ற அர்த்தப்படுகிறது. வேறு எந்தப் பாடலிலும் பள்ளி என்ற இனத்தைக் குறிக்கக் கூடிய சொல் கிடையாது. அப்படியென்றால், சங்க காலத்தில் பள்ளி என்ற இனம் இருந்ததற்கான ஆதாரம் கிடையாது.
ஆனால், இடைக்காலத்தில் கல்வெட்டுக்களில் பள்ளி என்ற இனம் பற்றிய செய்திகள் உள்ளன.

 சோழர்கள் ,வல் வில் ஓரி  மற்றும் பல  மன்னர்களை பள்ளி குடியினர் (வன்னியர் ) தங்களுடைய சாதியை சேர்ந்தவர்கள் என்று வரலாற்று பொய் பரப்புரைகளை பரப்பி வருகிறார்கள் .


அரியலூர் பாளைக்காரர் ஒரு தெலுங்கு பாளையக்காரர் ஆவர்.

ஆனைகுந்தி சமஸ்தானத்தில் (ஆந்திர மாநிலத்தில் விஜயநகர் சமஸ்தானத்தில் இருந்த பகுதி ) இருந்த ஒரு பகுதியை ராம நயினார் மற்றும் பூமி நயினார்  ஆகியோர் ஆட்சி செய்து வந்தார்கள். இவர்களை நாகம நாயக்கருக்கு(கிபி-16)   உதவிக்கு செல்லும் படி விஜயநகர அரசர் ஆனையிட்டார்.இவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து அரியலூர் பகுதிக்கு பாளையக்கார்களாக இருந்தார்கள். விஜயநகர அரசர் ராம நயினார்க்கு "ராம ஒப்பில்லா மழவராயர்" என்ற பட்டத்தை கொடுத்தார் .பிறகு இவருடைய வம்சாவளியினர்  மழவராயர் என்ற பட்ட பெயரை வைத்து கொண்டார்கள் .இவருடைய வம்சாவளியினர்பற்றி அரியலூர் பகுதியில் கிடைத்த கல்வெட்டுகள்(கிபி 1573-1843)  கூறுகிறது .அரியலூர் பாளைக்காரர் ஒரு தெலுங்கு பாளையக்காரர் ஆவர்.

பிச்சாவரம் ஜமீன்  பட்டம் கட்டுவதை வைத்துக் கொண்டு சோழர்கள் பரம்பரையினர் என்று கூற முடியாது..

// 1) களப்பிர அரசனான கூற்றுவ நாயனார் தில்லை வாழ் அந்தணர்களை முடிசூட்ட வேண்ட அவர்கள் சோழர்களின்றி சூட்டோம் முடி என மறுத்தது தெளிவாகிறது.

2) தில்லை வாழ் அந்தணரால் முடி சூட்டப்படும் பேறு பெற்ற ஒரு குடும்பத்தினர் இன்றும் சிதம்பரம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

3) இந்த சோழனார் மரபில் கி.பி 1844 -இல் இரத்தினசாமி சூரப்ப சோழனார் பிறகு இராமபத்திர சூரப்ப சோழனார், கி.பி. 1911 -இல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், 1943 - இல் ஆண்டியப்ப சூரப்ப சோழனார், பின்பு 1978 - இல் சிதம்பரநாத சூரப்ப சோழனார் முதலானோர் நடராசர் திருமுன் பட்டம் புனைந்திருக்கிறார்கள்.

4. இங்கு மற்ற இனத்தவர் பட்டம் கட்ட முடியாது. // இது தான் வன்னியர்கள் சோழர்கள் என்று சொல்ல காரணம். அதற்கு விளக்கம்

1. களப்பிர அரசன் (காலம் கி.பி 400- கி.பி 500) - வைதீக எதிர்ப்புச் சமயமாகிய பெளத்த சமயத்தவர்களாக இருந்தார்கள், இவர் சைவத்தை ஆதரிக்க வில்லை, அதனால் அந்தணர்கள் இவர்களுக்கு முடி சூட்டப்படாது தவிர்த்திருக்கலாம்.
அதனால் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்திருக்கலாம்.

2) அப்போது உள்ள அந்தணர்கள் காலம் (கி.பி 400 - கி.பி 500) இப்போது உள்ள தில்லை வாழ் அந்தணரால் காலம் ( கி.பி 1800) கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு பிறகு உள்ள  இவர்கள் அதே அந்தணர்களா? (இப்பொழுது உள்ள அந்தணர்கள் கோவில் தங்களது என்று பொய்யாக வழக்கு போட்டதை எல்லோரும் அரிந்ததே). நிர்வாகம் சோழனுக்கு பிறகு பல பேரிடம் போய் 18ஆம் நூற்றாண்டில் இவர்களிடம் வந்தது, ஆதாரம் கீழே

3) கி.பி 1844 முன்பாக இவர்கள் யாருக்கும் முடி சூட்டவில்லை . சோழனாரே தம்மை இரண்யவர்ம பல்லவன் வழியினர் என்று கூறுகிறார். 1844 ஆண்டுகளுக்கு முன் யாருக்கும் கட்டப்பட்ட ஆதாரமும் இல்லை.

4) வெள்ளையர் காலத்தில் அந்த அந்த பகுதியில உள்ள ஜமீன்களே அங்குள்ள கோயிலுக்கு முடி சூட்டப்படும் உரிமையைப் பெற்றார்கள். அதர்க்கு உதாரணம் இப்பொழுதும் தஞ்சை கோவிலில் மராட்டிய சரோபோஜி வாரிசுக்கும், இன்றும் பட்டம் கட்டுவதை காணமுடிகிறது. இது போல தான் பிச்சாவரம் ஜமீன்களுக்கும்.
கோயில் வரலாறு:

கி.பி.14ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழ் மண்ணில் முஸ்லீம்களின் ஆட்சி நடந்த போது  கி.பி. 1310 முதல் கி.பி. 1376 ஆண்டுகள் சிதம்பரத்தில் பூசை இல்லை. நடராசர் கோயிலை விட்டு வெளியேறி ஒரு பெரிய புளியமரப் பொந்தில் இருந்தார். இரண்டாம் அரிகரனின் அமைச்சர் முத்தய்யத் தண்டநாயகன் மீண்டும் நடராசரைச் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்து பூசைக்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். இதனைச் சோழ மண்டல சதகம் என்ற நூல் மிகத் தெளிவாகக் கூறுகிறது (பாடல் எண் 99).
கோயில் கல்வெட்டும் இதனைத் தெரிவிக்கிறது.

கி.பி.1610 ஆம் ஆண்டு லிங்கமநாயக்கர் என்ற வீரசைவர் அளித்த உதவியால் கும்பகோணம் சைவ வேளாளர் சிவப்பிரகாசர் என்பவர் சிதம்பரம் கோயில் பராமரிப்பையும் நிர்வாகத்தையும் மேற்கொண்டார்.

கி.பி. 1648 வரை துறையூர்ப் பாளையக்காரர் ரெட்டியார்களின் நிர்வாகத்தில் கோயில் இருந்தது.

பீஜப்பூர் சுல்தான் படைத் தாக்குதலில் 24.12.1648 லிருந்து குடுமியாமலையில் 40 மாதம் நடராசர் இருந்தார். அங்கு பாதுகாப்புக் குறைவு ஏற்பட்டதால் நடராசரை மதுரைக்குக் கொண்டு சென்று 37 வருடம் 10 மாதம் 20 நாட்கள் வைத்திருந்தனர்.

மராட்டியர் ஆட்சியின் போது  தஞ்சையில் ஆட்சி செய்த வீர சிவாசியின் மூத்த மகன் தன் சிறிய தந்தையார் மகன் சகசி உதவியோடு மதுரையிலிருந்து நடராசரை சிதம்பரம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். 21.11.1684 (இச்செய்திகள் திருவாரூர்க் கோயிலிலிருந்து மைய அரசின் தொல்லியல் துறை படியெடுத்த 4 செப்பேடுகளில் விரிவாகக் கூறப்படுகிறது.

21.1.1711 - வேளூர் அம்பலவாணத் தம்பிரான் என்பவரிடம் நிர்வாகம் இருந்தது

19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் 20 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை சிதம்பரத்தை அடுத்துள்ள பிச்சாவரம் சமீன்தார்கள் நிருவாகத்தில் சிதம்பரம் கோயில் இருந்துள்ளது.