Sunday 21 August 2016

சோழன் பூர்வ பட்டயம்


கொங்கு நாட்டில் உழவு தொழில் செய்வதற்காக சோழ நாட்டின் செந்தலை நகர் ,படைதலை நகர் ,பாலசேரி நகர் ,தென்திசையூர் நகர் போன்ற பகுதிகளில் இருந்து வெள்ளாளர்களை அடிமைகளாக அழைத்து வந்தவர்கள் வேட்டுவ மன்னர்கள் .
சோழ நாட்டின் செந்தலை நகர் ,படைதலை நகர் ,பாலசேரி நகர் ,தென்திசையூர் நகர் போன்ற பகுதிகளில் இருந்து வந்த வெள்ளாளர்களை படைதலை வெள்ளாளர் ,செந்தலை வெள்ளாளர்,பால வெள்ளாளர்,தென்திசை வெள்ளாளர் என்று அழைக்கபடுகிறது .பதினெண் குடிமக்களில் உழவு தொழில் செய்பவர்கள் வெள்ளாளர்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .
கொங்கு நாட்டில் 36 ஊர்களில் உழவு தொழில் செய்வதற்காக சோழ நாட்டு வெள்ளாளர்களை அழைத்து வந்தவர்கள் சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .
சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் கொங்கு நாட்டில் 36 ஊருக்கும் தாசிகளை வைத்தார்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .
சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் கொங்கு நாட்டில் 36 ஊர்களில் 32 ஊர்களுக்கு கோட்டை ,நகர் ,ஊர் அதிகாரத்துக்கு வேட்டுவர்களை வைத்தார்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .
வேட்டுவ மண்ணாடிகளுக்கு ,வெள்ளாளர்கள் வரி கொடுத்ததை பற்றி சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .
(மண்ணாடி-நில தலைவன் ).

கொங்கு வெள்ளாள கவுண்டர்ளின் வரலாற்று திருட்டு


வேட்டுவர் இனத்துக்கும் , வெள்ளாளர் இனத்துக்கும்(கொங்கு வெள்ளாளர் ) கூட்ட பெயர்கள் ஒன்றாக இருப்தை பயன்படுத்தி வெள்ளாள சாதினர் ,வேட்டுவ இன வரலாறுகளை திருடி கொள்கிறார்கள் .

உதாரணம் :
'...இப்படிக்கு பூந்துறையில் வெள்ளாளன் மேலைசாகாடைகளில் அப்பியன் எழுத்து..இப்படிக்கு எழுமாத்தூரில் வெள்ளாளன் பனகாடர்களில் பெரியன்ன காகுதார் எழுத்து..இப்படிக்கு குலவிளக்கில் பண்டி வேட்டுவரில் புலிகுத்தி தேவன் எழுத்து...இப்படிக்கு அறைச்சலூரில் கரைய வேட்டுவரில் குன்றிடர் எழுத்து..இப்படிக்கு குழாநிலையில் வெள்ளை வேட்டுவரில் நல்லண்ணன் எழுத்து ..,
(1967-68:231,கிபி 16,வீர நஞ்சராயர் ,பெருந்துறை கல்வெட்டு )
'..சோழியன் கரை ஒன்றுக்கும் அந்துவ வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் மேற்படி நச்சுளி வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் குறுங்காடை வேட்டுவரில் சின்னன் கரை ஒன்றுக்கும் வெள்ளாளன் தனிஞ்சிகளில் தயாண்டர் கரை ஒன்றுக்கும் ..'
(ARE No-226 of 1968, ஈரோடு கல்வெட்டு ,கிபி 1538,திருமலை நாயக்கர் )
இக்கல்வெட்டு
அந்துவ வேட்டுவர் -அந்துவ வேட்டுவ கூட்டம்
நச்சுளி வேட்டுவர் - நச்சுளி வேட்டுவ கூட்டம்
குறுங் காடை வேட்டுவர் -குறுங் காடை வேட்டுவ கூட்டம் (குறும்பூழ் -காடை)
தனிஞ்சி வெள்ளாளர் - தனிஞ்சி வெள்ளாள கூட்டம்
போன்ற கூட்ட பெயர்களை கூறுகிறது .
'...வெள்ளாளன் அந்துவரில் செய கரிவான்டரும் ..'
(காங்கேயம் கல்வெட்டு ,கிபி 1537,விஜய நகர் ஆட்சி )
இன்று காடை வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .காடை வேட்டுவர்களின் குல தெய்வம் கொங்கலம்மன் (பெரிய புலியூர் ,ஈரோடு ) இன்று காடை குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று காடை குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு காடை வேட்டுவ குலமும் ,காடை வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது .
இன்று அந்துவ வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .அந்துவ வேட்டுவர்களின் குல தெய்வம் பத்ரகாளியம்மன் (அந்தியூர் ,ஈரோடு ) இன்று அந்துவ குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று அந்துவ குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு அந்துவ வேட்டுவ குலமும் ,அந்துவ வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது . இது தான் உண்மை .
இது போலத்தான் மற்ற குலங்கள். இந்த உண்மையை வெள்ளாளர்கள் மறைத்து ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் .
வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடி ஏறுகிற போது கூட்டம் அல்லது குலம் கிடையாது . கி பி 10ஆம் நூற்றாண்டுகளில் வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடி ஏறுகிற போது வெள்ளாளர் களை பல கூட்டங்களாக பிரிக்கப்பட்டு சாட்சி கையெழுத்து போட்டவர்களில் ஒருவர் வேட்டுவர் என்று கொங்கு காணியான பட்டயம் கூறுகிறது . இன்று வேட்டுவ குலத்துக்கும் ,வெள்ளாள குலத்துக்கும் 20 கூட்ட பெயர்கள் ஒன்றாக இருக்கிறது .இதற்கு காரணம் வெள்ளாளர்கள் ,பெருமைமிக்க வேட்டுவ கூட்ட பெயர்களை பார்த்து அதே கூட்ட பெயர்களை வைத்து கொண்டார்கள் .
                                                                வெள்ளாளர்களின் போலி பட்டயங்கள் மற்றும் போலி வரலாறுகள்:

வெள்ளாளர்கள் ஆண்ட பரம்பரை என தம்ப்பட்டம் அடித்து கொள்வதற்காக உருவாக்க பட்ட போலி பட்டயங்கள்:

மரம் பிடுங்கி பட்டக்காரர் செப்பேடு ,நீலம்பூர் காணி செப்பேடு,ஈஞ்ச குல காணி பட்டயம் ,தென்கரை நாட்டு பட்டயம் ,காலிங்கராயன் அணை பட்டயம்,மாந்திரம் சேரல் மெய்கீர்த்தி ,கன்னிவாடி கண்ணகுல பட்டயம்.

வெள்ளாளர்கள் ஆண்ட பரம்பரை என தம்ப்பட்டம் அடித்து கொள்வதற்காக உருவாக்க பட்ட போலி வரலாறுகள் :
தீரன் சின்னமலை -போலி வரலாறு
பொன்னர் -சங்கர் கதை -போலி வரலாறு


வெள்ளாள கவுண்டர் சாதி -சூத்திரர்

தமிழ் மண்ணில் தொழில்கள் அடிப்படையில் சாதிகள் உருவானது .தமிழ் மண்ணில் நான்கு வர்ண முறை கடைபிடிக்க வில்லை .ஆனாலும் தமிழ் புலவர்கள் தமிழ் மண்ணில் தொழில்கள் அடிப்படையில் உருவான சாதிகளை நான்கு வர்ணத்தில் (அந்தணர் ,சத்திரியர் ,வைசியர் ,சூத்திரர் ) வைத்து இலக்கியங்கள் உருவாக்கி உள்ளனர் . இதில் வெள்ளாளர் களை சூத்திரர் சாதியை சேர்ந்தவராக கூறி உள்ளார்கள் .
கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் சுமதிபார்கவா என்பவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் மனுதர்ம சாஸ்திரம் கீழ் கண்டவாறு நான்கு வருணக் கடமைகளைப் பட்டியலிடுகின்றது.

அந்தணர் அறுதொழில்கள் : 1. வேதம் ஓதுதல், 2. வேதம் ஓதுவித்தல், 3. வேள்வி புரிதல், 4. வேள்வி செய்வித்தல், 5. ஈதல், 6. ஈதலை ஏற்றல்.
அரசனது தொழில்கள் : 1. பிரஜா பரிபாலனம் (குடிகாவல்), 2. ஈகை, 3. வேள்விகள் புரிவது, 4. வேதம் பாராயணம் செய்விப்பது, 5. விஷய சுகங்களில் மனத்தை அலையவிடாமல் உறுதியாக நிற்பது.
வைசியருக்கான தொழில்கள் : 1. ஆநிரைகாத்தல், 2. தானம் கொடுத்தல், 3. கடலாரம், மலையாரம், கனிப்பொருள், விளைபொருள், தானியங்கள் இவற்றை வியாபாரம் செய்தல், 4. வட்டிக்கு விடுதல், 5. பயிர்த் தொழில் செய்தல்.
சூத்திரர்களுக்கான தொழில்கள் : ஏவலரான இவர்கள் மேலே சொன்ன மூவர்க்கும் பொறாமையின்றிப் பணிபுரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக் கடவரென்றும் ஈதல் முதலிய சத்கருமங்களும் அவர்களுக்கு உண்டென்றும் பணித்தார்.
மேலே கூறப்பட்ட நெறி முறைகள் தமிழ்ச் சமுதாய மரபுகளுக்குப் பொருந்துகின்றனவா எனக் கீழே ஆராயப்படுகின்றது.
கி.பி. 2 அல்லது 3-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும், தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியம், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு வருணங்களுக்குரிய உரிமைகளையும், தொழில்களையும் கீழ்கண்டவாறு தெளிவாக இலக்கணப்படுத்தியுள்ளது.
அந்தணர்க்கு உரிய மரபுகள் :
நூலே, கரகம், முக்கோல், மனையே,
ஆயும் காலை, அந்தணர்க்கு உரிய. (மரபியல் : 71)
பொருள் : (நூல்) பூணூல், கமண்டலம், முக்கோல், இருக்கை மணை, ஆகிய நான்கும் ஆயும் காலத்து அந்தணர்க்கு உரியவை.
அரசர்க்கு உரிய மரபுகள் :
படையும், கொடியும், குடையும், முரசும்
நடைநவில்புரவியும், களிறும், தேரும்,
தாரும், முடியும், நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க்கு உரிய. (மரபியல் : 71)
அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு
ஒன்றி வரூஉம் பொருளுமார் உளவே. (மரபியல் : 73)
பொருள் : அந்தணர்க்கு உரியன என்று முன்னே கூறப்பட்டவற்றுள் அரசர்க்கும் உரியனவாக ஒன்றிவரும் பொருளும் உண்டு.
அரசர்க்கு உரியன சில அந்தணர்க்கு இல்லை :
பரிசில், பாடாண் திணைத் துறைத் கிழமைப் பெயர்
நெடுந்தகை, செம்மல் என்று இவை பிறவும்
பொருந்தச் சொல்லுதல் அவர்க்கு உரித்தன்றே (மரபியல் : 74)
வைசிகன் பெறுவன :
வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை
மெய்தெரி வகையின் எண் வகை உணவின்
செய்தியும் வரையார் அப்பாலான. (மரபியல் : 78)
பொருள் : எண்வகை உணவாவன : நெல், காணம், வரகு, இறுங்கு, தினை, சாமை, புல், கோதும்பை இவற்றை உண்டாக்குகின்ற உழவுத் தொழிலும் வைசியர்க்குரியதாகும்.
வேளாண் மாந்தர் இயல்பு :
வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல் என மொழிப - பிறவகை நிகழ்ச்சி (மரபியல் : 81)
பொருள் : வேளாளருக்கு உழுது உண்ணும் வாழ்க்கை அல்லாது வேறு வகையான வாழ்க்கை இல்லை என்று கூறுவர் அறிஞர்.
வேந்துவிடு தொழிலின் படையும் கண்ணியும்
வாய்த்தனர் என்ப - அவர் பெரும் பொருளே (மரபியல் : 82)
பொருள் : வேந்தரால் ஏவப்பட்ட தொழிலால் படைக்கலம் கண்ணி (தலைமாலை) ஆகியவை வேளாளர்கள் பெறும் பொருள்கள்.
மேலே கூறப்பட்டுள்ள தொல்காப்பிய நூற்பாக்களால், சங்க காலத்தில் நான்கு வருணக் கோட்பாடு மனுநீதி அடிப்படையில் தெளிவாக வரையறுக்கப்பட்டு விட்டது என்பது நிரூபணமாகின்றது. சங்க இலக்கியங்கள் முழுவதிலும் எந்த இடத்திலும் மேலே கூறப்பட்ட இலக்கண முறைக்கு மாறான மரபுகளைக் காண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் பாடிய ஒரு புறநானூற்றுப்பாடல் தமிழ்ச் சமுதாயத்தில் அன்று வழக்கிலிருந்த நான்கு வருண பாகுபாட்டைக் குறிப்பிடுகின்றது.
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழப்பாலொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன்கட் படுமே (மரபியல் : 183)
சங்க காலத்தைத் தொடர்ந்து களப்பிரர் காலத்தில் (கி.பி. 250 -
கி.பி. 590) இயற்றப்பட்டதாகக் கருதப்படும் மணிமேகலையும் நான்கு வருணத்தைக் கூறுகின்றது.
அருந்தவர்க் காயினும் அரசர்க்காயினும்
ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க்காயினும்
நால்வேறு வருணப் பால்வேறு காட்டி.
(மணிமேகலை : 6 சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை : 7)
கி.பி. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலப்பதிகாரமும் நால்வகை வருணங்களைக் குறிப்பிடுகின்றது.
கனக பாதமுங் களங்கமும் வந்துவும்
நால்வகை வருணத்து நலங்கே மொழியவும் (சிலம்பு-14-180-82)
பால்வேறு தெரிந்த நால்வேறு தெரு (சிலம்பு-22-110)
பால்வேறு தெரிந்த நால்வேறு வீதி (சிலம்பு ஊர் காண்காதை-212)
இடம் கெட ஈண்டிய நால்வகை வருணத்து
அடங்காக் கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப (சிலம்பு கடலாடு காதை. 6-8-164-165)
புறப்பொருள் வெண்பா மாலை வேளாண் வாகைப் பற்றிக் கூறுவதாவது :
மேல் மூவரும் மனம் புகல
வாய்மையான் வழியழுகின்று (வாகைத்திணை -10-165)
இங்கு மேல் மூவரும், வேளாளரும் சேர்த்து நான்கு வருணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் வேளாளராகிய சேக்கிழாரால் எழுதப்பட்ட பெரியபுராணம் பல இடங்களில் வேளாளரை நாலாவது குலம் எனக் குறிப்பிடுகின்றது.
குறியின் நான்கு குலத்தினராயினும்
நெறியின் அக்குலம் நீங்கினராயினும் (குலச்சிறையார்.4)
நாலாங் குலத்திற் பெருகு நலம் உடையார் வாழும் ஞாயிற்றின்
மேலாங் கொள்கை வேளாண்மை மிக்க திருஞாயிற்றுக் கிழார். (29. ஏயர்கோன் - கலிக்காமநாயனார்)
வேத நெறியின் முறை பிறழாமிக்க ஒழுக்கத் தலைநின்ற
சாதி நான்கு நிலை தழைக்குந் தன்மைத் தாகித்தடமதில் சூழ் (37. சுழற்றியார்.4)
ஓங்கிய நாற்குலத் தொஏவாப் புணர்வில் தம்மில்
உயர்தனவும் இழிந்தனவும் ஆன சாதி
தாங்குழுமிப் பிறந்த குலபேதம் எல்லாம் (19. திருக்குறிப்புத் தொண்டர் நாயனார். செ.103)
கி.பி. 9-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகரம் நிகண்டு, நான்கு வருணத்தாருக்குரிய பெயர்களையும், அவர்களுடைய தொழில்களையும் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது.
பார்ப்பார் பெயர் :
அய்யர், வேதியர், இருபிறப்பாளர்,
மெய்யர், மிக்கவர், இறையோர், பூசரர்,
அந்தணர், நூலோர், அறுதொழிலாளர்,
செந்தீ வளர்ப்போர், உயர்ந்தோர், ஆய்ந்தோர்,
ஆதி வருணர், வேத பாரகர்,
வேள்வியாளர், விப்பிரர், தொழுகுலத்தோர்
முப்புரி நூலோர், முனிவர், என்று இவை
தப்பு இல் பார்ப்பார் தம் பெயர் ஆகும். (திவா : 167)
அந்தணர் அறு தொழில் :
ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்,
ஈதல், ஏற்றல் என்று இவை ஆறும்
ஆதி காலத்து அந்தணர் அறு தொழில். (திவா : 2365)
அரசர் பெயர் :
புரவலன், கொற்றவன், பெருமாள், காவலன்,
அரசன், ஏந்தல், கோவே, குரிசில்,
தலைவன், மன்னவன், வேந்தன், முதல்வன்,
நிருபன், பூபாலன், நரபதி, பார்த்திபன்,
இறைவன், அண்ணல், எனப்பதி னெட்டும்
அரசர் தொல் பெயர் ஆகும் என்ப. (திவா : 178)
அரசர் அறு தொழில் :
அரசர் அறுவகைச் செய்தொழில் ஓதல்,
விசையம், வேட்டல், ஈதல், பார்புரத்தல்,
(கரை இல்) படைக்கலம் கற்றல் ஆகும் (திவா : 2366)
செட்டிகள் பெயர் :
இப்பர், பரதர், வயிச்சியர், கவிப்பர்,
எட்டியர், இளங்கோக்கள், ஏர்த்தொழிலர், பசுக்காவலர், (ஒப்பு இல்) நாய்க்கர்,
வினைஞர், வணிகர் என்று (அத்தகு) சிலேட்டர்,
செட்டிகள் பெயரே.
வணிகர் அறு தொழில் :
வணிகர் அறுதொழில் ஓதல், வேட்டல்,
ஈதல், உழவு, பசுக்காவல், வணிகம் (திவா : 2367)
வேளாளர் பெயர் :
வினைஞர், சூத்திரர், பின்னவர், சதுர்த்தர்,
வளமையர், வேளாளர், மண்மகள் புதல்வர்,
வார்த்தைத் தொழிலோர், (வண்) களமர், உழவர்,
(சீர்த்த) ஏரின் வாழ்நர், காராளர்.
வேளாளர் அறுதொழில் :
வேளாளர் அறு தொழில் உழவு, பசுக்காவல்,
(தெள்ளிதின்) வாணிகம், குயிலுவம், காருகவினை, (ஒள்ளிய)
இருபிறப்பாளர்க்கு ஏவல் செயல்.
திவாகரத்தில் கூறப்பட்டுள்ள நான்கு வருணத்தாருக்குரிய தொழில்கள் மனுநீதியிலிருந்து சிறிது மாறுபடுகின்றது. வைசியருக்குரிய பசுக்காவல், வாணிகம் முதலியன வேளாளருக்கும் கூறப்பட்டுள்ளது. களப்பிரர் காலச்சமூக மாற்றத்திற்குப் பின் வேளாளரில் ஒரு பிரிவினர் இத்தொழிலுக்குரியோராகியுள்ளனர்.
கி.பி. 10ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிங்கலத்தை என்னும் பிங்கல நிகண்டில் காணப்படும் நான்கு வருணத்தாரைப் பற்றிய குறிப்புகளைக் கீழே பார்ப்போம்.
பார்ப்பார் :
அறவோர் பூசுர ரறு தொழி லாள
ரிருபிறப் பாள ரெரிவளர்ப் போரே
யாதி வருணர் வேதிய ரந்தணர்
வேள்வியாளர் மறையவர் விப்பிரர்
மேற்குலத் தோர்முற் குலத்தோ ரையர்
வேத பாரகர் முப்புரி நூலோர்
தொழுகுலர் பார்ப்பார் தொல் பெய ராகும். (பிங் : 726)
அறவோர், பூசுரர், அறுதொழிலாளர், இருபிறப்பாளர், எரிவளர்ப்போர், ஆதிவருணர், வேதியர், அந்தணர், வேள்வியாளர், மறையவர், விப்பிரர், மேற்குலத்தோர், முற்குலத்தோர், ஐயர், வேதபாரகர், முப்புரிநூலோர், தொழுகுலர்.
அந்தணர் அறுதொழில் :
ஓத லோதுவித்தல் வேட்டல் வேட்பித்த
லீத லேற்ற லென்றிவை யாறு
மாதிக் காலத் தந்தணர் தொழிலே. (பிங் : 729)
அந்தணர் மாலை : கமலம்
அந்தணர் கொடி : வேதம்
மாலை கமல மறை கொடியாகும் (பிங் : 730)
அந்தணர்க்குரிய பொருள் :
தருப்பை, முஞ்சிப்
புல், சமித்து தருப்பையு முஞ்சியுஞ் சமித்து
மவர்க்கே (பிங் : 731)
அரசர் :
பார்த்தி பரிறைவர் காவலர் பதிகள்
கோக்கள் வேந்தர் கொற்றவர் புரவலர்
பொருநர் மன்னர் பூபாலர் நிருபர்
முதல்வ ரேந்தல் குரிசின் மகிபாலர்
தலைவ ரரசர் தம்பெய ராகும். (பிங் : 733)
(பார்த்திபர், இறைவர், காவலர், பதிகள், கோக்கள், வேந்தர், கொற்றவர், புரவலர், பொருநர், மன்னர், பூபாலர், நிருபர், முதல்வர், ஏந்தல், குரிசில், மகிபாலர், தலைவர்.)
எண்வகை மாலை :
வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
நொச்சி யுழிஞை தும்பை வாகை யென்
றித்தொடை யெட்டு மரசர்க்காமே. (பிங் : 734)
(வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை.)
அரசர்கள் படை : அறுவகைத் தானை
அரசர்கள் கொடி : சிங்கம்
படையறு வகைத்தானை கொடி சிங்கமாகும் (பிங் : 735)
அரசர் அறு தொழில் :
ஓதல், பொருதல், உலகுபுரத்தல், ஈதல்,
வேட்டல், படை பயிறல்.
ஓதல் பொருத லுலகு புரத்தல்
ஈதல் வேட்டல் படை பயிற லறு தொழில். (பிங் : 767)
வைசியர் பெயர் :
தாளாளரிப்பர் தருமக் கிழவர்
வேளா ரிளங் கோக்கள் வைசியர் பொதுப் பெயர் (பிங் : 773)
(தாளாளர், இப்பர், தருமக்கிழவர், வேளார், இளங்கோக்கள்)
வைசியர் முத்தொழில் :
கோக்களாக் காத்தலு மாப்பொரு ளீட்டலு
மேர்த் தொழின் மூன்று வைசியர் தந் தொழிலே. (பிங் : 774)
(கோக்களைக் காத்தல், பொருளீட்டல், ஏர்த்தொழில்)
தளவைசியர் :
நாய்கர், எட்டியர், வணிகர், பரதர்
நாய்க ரெட்டியர் வணிகர் பரதர்
தாமும் பிறவுந் தனவை சியர்க்கே ( பிங் : 776)
பூவைசியர் :
உழவர், மேழியர், காராளர், இளங்கோ, பூபாலர்
உழவர் மேழியர் காராள ரிளங்கோ
புகல் பூ பாலர்பூ வைசியர் பெயரே. (பிங் : 777)
பூவைசியர் அறு தொழில் :
ஓதல், வேட்டல், உபகாரம், வாணிகம், பசுக்காவல், உழவுத் தொழில்.
ஓதல் வேட்ட லுபகார மன்றியும்
வாணிகம் பசுக்காவ லுழவுத் தொழி லெனப்
புகன்றவை யாறும் பூவைசியர் தொழிலே. (பிங் : 778)
சூத்திரர் :
பின்னவர், சதுர்த்தர், பெருக்காளர், வளமையர், முத்தொழிலர், மண்மகள் புதல்வர், உழவர், ஏரின் வாழ்னர், காராளர், வினைஞர், மேழியர், வேளாளர்.
பின்னவர் சதுர்த்தர் பெருக்காளர், வளமையர்,
மன்னமுத் தொழிலர், மண்மகள் புதல்வர்,
உழவ, ரேரின் வாழ்னர், காராளர்,
வினைஞர், மேழியர், வேளாளரென்றிவை,
தொகுபெய ரெல்லாஞ் சூத்திரர் பெயரே. (பிங் : 780)
வேளாளர் பத்துவகைத் தொழில் : ஆணைவழிநிற்றல், மாண்வினை தொடங்கல், கைக்கடனாற்றல், குற்றமனத்தின்மை, சுற்றம் போற்றல், நீங்காத முயற்சி, மன்னிறை தருதல், ஒற்றுமை கோடல், ஒழுக்கம், விருந்து புறந்தருதல்.
ஆணைவழி நிற்றல் மாண்வினை தொடங்கல்
கைக்கட னாற்றல் கரிலகத் தின்மை
யக்கல் போற்ற லோவா முயற்சி.
மன்னிறை தருத லொற்றுமை கோட
றிருந்திய வொழுக்கம் விருந்து புறந் தருதல்
வேளாண் மாந்தர் செய்கை டூரைந் தே.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டு, மனு நீதியிலிருந்து விலகிச் சென்ற திவாகரத்தின் வரையறைகளை ஒழுங்கு படுத்தியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் சூத்திரராகிய வேளாளரில் உயர்குடியினர் பூவைசியர் என்ற தகுதியை அடைந்துவிடுகின்றனர். பூவையருக்குரிய தொழிலில் ஓதலும், வேட்டலும் இடம் பெற்று விடுகின்றன.
இக்கால கட்டத்திலிருந்துதான் பிராமணரும் அரச வருணத்தினரும் வகித்து வந்த அமைச்சர் பதவி பெருவாரியாக உயர்குடி வேளாளருக்குக் கிடைத்து வந்தது. கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஏவையாரின் தனிப்பாடல் ஒன்று ஒருபடி மேலே சென்று வேளாளரே அமைச்சர் பதவிக்கு உகந்தவர் எனக் கூறுகின்றது.
நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெசைமராம்
கோலெனிலோ ஆங்கே குடிசாயும் - நாலாவான்
மந்திரியும் ஆவான் வழிக்குத் துணையாவான்
அந்த அரசே யரசு.
இப்பாடலின் பொருள்,
நூலெனிலோ கோல் சாயும் - பார்ப்பனர் மந்திரி ஆனால் நெளிவு சுழிவு இல்லாத ஆலோசனை வழங்குவர். எனவே அங்கு அரசனின் செங்கோல் சாயும்.
நுந்தமரேல் வெசைமராம் - உன்னுடைய அரச வர்ணத்தான் மந்திரியானால் ஓயாத போரினைத் தூண்டுபவனாக இருப்பான். எனவே நாட்டின் பொருளாதாரம் சீர் கெட்டு, அமைதி கெடும்.
கோலெனிலோ ஆங்கே குடிசாயும் - துலாக்கோல் பிடிக்கக் கூடிய வணிகன் (வைசிய வருணத்தவன்) மந்திரியானால், குடிகளிடமிருந்து அதிகவரி பெற்றுக் கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருப்பான். எனவே அங்குக் குடிசாயும்.
நாலாவான் மந்திரியும் ஆவான் வழிக்குத் துணையாவான் அந்த அரசே யரசு - நாலாம் வருணத்தானாகிய வெள்ளாளன் நல்ல மந்திரியாகவும், எல்லா வழிக்கும் நல்ல துணையாகவும் இருப்பான். அப்படிப்பட்ட வெள்ளாளனை மந்திரியாகப் பெற்ற அரசே சிறந்த அரசு.
இத்தனை மாற்றங்கள் ஏற்பட்ட பின்னரும் கி.பி. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த நச்சினார்க் கினியரும் கி.பி. 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த இளம் பூரணரும் தொல்காப்பியத்தின் கீழ்க்கண்ட பாடலுக்கு உரை எழுதும் பொழுது தெளிவாக நான்கு வருணப் பாகுபாட்டை ஏற்று எழுதுகின்றனர்.
மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே (தொல் : பொருள் : கற்பியல் : 142)
நச்சினார்க்கினியர் உரை :
முற்காலத்து நான்கு வருணத்தாருக்கும் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது என்பதாம். அ•து இரண்டாம் ஊழி தொடங்கி வேளாளருக்குத் தவிர்த்தது என்பதூஉம். தலைச் சங்கத்தாரும் முதனூலாசிரியர் கூறிய முறையே கரணம் ஒன்றாகச் செய்யுள் செய்தார் என்பதூஉம் கூறிய வாறாயிற்று ... ........ . ......
இளம்பூரணர் உரை :
மேற்குலத்தாராகிய அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூன்று வருணத்தாருக்கும் புணர்த்த கரணம், கீழோ ராகிய வேளாண் மாந்தருக்கு ஆகிய காலமும் உண்டு என்றவாறு.
கி.பி. 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் கூறுவதாவது:
நாற்பெரும் பண்ணும் சாதி நான்கும் பாற்படுதிறனும் பண்ணெனப்படுமே. இம்மரபுப்படி,
அந்தணருக்கு - வெண்பா
அரசருக்கு - ஆசிரியப்பா
வணிகருக்கு - கலிப்பா
வேளாளருக்கு - வஞ்சிப்பா
ஆகும்.
நச்சினார்க்கினியரும், இளம் பூரணரும், அடியார்க்கு நல்லாரும் நான்கு வருணப் பாகுபாட்டை இயல்பாகக் கூறுகின்றனர். எனவே தமிழ்ச் சமூகத்தில் 13, 14ம் நூற்றாண்டுகளிலும் நான்கு வருணப் பாகுபாடு தெளிவாக நிலவியது புலப்படுகின்றது.
இவ்வாறு நான்கு வருணத்தவர் யார் யார் என்றும் அவர்களுடைய இயல்புகள் பற்றியும் ஏராளமான இலக்கியக் குறிப்புகள் உள்ளன. தமிழ்ச் சமூகத்தில் இல்லை எனக் கருதப்படும் அரசர் மற்றும் வைஸ்ய வருணத்தாருக்கு உரியதாக இத்தனை விரிவான வரையறைகளை தமிழ் இலக்கண நூல்களும் நிகண்டுகளும் காலம்தோறும் கூறவேண்டிய தேவை என்ன ஏற்பட்டது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இதன் பின்னரும் கி.பி. 16ஆம் நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட நிகண்டுகளான உரிச் சொல் நிகண்டு (கி.பி. 14ம் நூற்றாண்டு), கயாதரம் (கி.பி. 15ம் நூற்றாண்டு), பாரதி தீபம் (கி.பி. 15ம் நூற்றாண்டு), சூடாமணி நிகண்டு (கி.பி. 16ம் நூற்றாண்டு), அகராதி நிகண்டு (கி.பி. 1594) ஆகியவைகளும் ஏறக்குறைய இதே மாதிரியான சமூகச் சித்திரத்தையே கொடுக்கின்றன.
கி.பி. 1700 ல் இயற்றப்பட்ட வட மலை நிகண்டிலும் (பல் பொருள் சூடாமணி), கி.பி. 1732ல் வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட சதுரகராதியிலும் நான்கு வருணச் சமூகச் சித்திரத்தில் பெரிய மாற்றம் தெரிகின்றது.
வடமலை நிகண்டின் சமூகச் சித்திரம் :
அந்தணர் : முனிவர், பார்ப்பார்
அரசன் : பிரகஸ்பதி, மன்னன்
வேளாளர் : தனவைசியர், தியாகி, பூவைசியர்.
சதுரகராதி காட்டும் சமூகச் சித்திரம் :
அந்தணர் : பார்ப்பார், முனிவர்
அரசன் : இராசா, எப்பொருட்கு மிறைவன், வியாழன்
வேளாளர் : ஈகையாளர், பூவைசியர்
இவ்விரு நிகண்டுகளிலும் வைசியருக்குப் பொருள் கூறப்படவில்லை. வடமலை நிகண்டில் பூவைசியருடன் சேர்த்து தனவைசியரும் வேளாளரில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதாவது வைசிய வருணம், சூத்திரவருணமாகிய வேளாளரில் சேர்க்கப்பட்டு விட்டது.
அரசருக்குரிய பெயரில் மன்னன்,ராஜா என்ற பட்டம் மட்டுமே கூறப்பட்டுள்ளது. மேலும் அரசர்க்குரிய தொழில்களும் கூறப்படவில்லை. நிகண்டுகளில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள், அன்றைய கால கட்டத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைக் குறிப்பதாகவே உள்ளன. இக்கால கட்டத்தில் பழைய அரச சாதியினரில் பாண்டியர் பாண்டிய நாடு ( தென்காசி பகுதிகள் ) மற்றும் கொங்கு நாடு (பெருந்துறை பகுதிகள் ) போன்ற இடங்களில் குறுநில மன்னர்கள் போல் ஆட்சி செய்து வந்தனர் மற்றும் இக்கால கட்டத்தில் பழைய அரச சாதியினரில் அள்ளால இளையன் என்பவர் மழகொங்கு பகுதிகளை ஆட்சி செய்த குறுநில மன்னர் ஆவார் மற்றும் மாவலி வணதிராயர் மதுரை அலங்கா நல்லுரை தலைமை இடமாக கொண்டு ஆண்டார்கள் . மதுரையை ஆண்ட நாயக்கர்கள் தமிழ்நாட்டின் பெரும் பகுதியை 72 பாளையங்களாகப் பிரித்து ஆண்டு வந்தனர். அந்த 72 பாளையக்காரர்களில் ஒருவர் கூடப் பழைய அரச சாதியைச் (வேட்டுவ இனம் ) சேர்ந்தவர்கள் அல்ல. அந்த 72 பாளையக்காரர்கள் பள்ளி இனம் ,மறவர் இனம் ,அகம்படி இனம் ,நாயக்கர் இனம் போன்ற சாதிகளை சேர்ந்தவர்கள் .இவர்கள் தமிழகத்தின் மிகப் பெரும்பான்மையான நிலப்பகுதிகளை ஆண்டு வந்தனர். எனவேதான் இக்காலக்கட்டத்தைச் சேர்ந்த நிகண்டுகளால் தமிழக மூத்தகுடி அரசர்க்குரிய பழைய பட்டங்களையும், தொழில்களையும் கூற முடியவில்லை. மேலும் இந்நிகண்டுகளில் தமிழக மூத்தகுடி அரசர்க்குரிய தொழில்கள் வரையறுக்கப்படாததால், இவைகள் கூறும் அரசர் என்ற பதம் இரண்டாம் வருணத்தைக் குறிப்பதாகவும் கொள்ளமுடியவில்லை. இச்சூழலில்தான் பிராமணர் தவிர பிற வருணத்தவர் அனைவரையும் ஒரே வருணமாக, சூத்திர வருணமாகக் கருதும் நிலை உருவாகி விட்டது. வரலாற்றில் அன்று ஏற்பட்ட மயக்கம்தான் இன்றுவரை தொடர்கின்றது.