Tuesday 29 July 2014

வேட்டுவர் இனத்துக்கும்,பள்ளர் இனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது .



வேட்டுவர் இனத்துக்கும் ,பள்ளர் இனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது  there is no connection between "Vettuvar" (Vettuva gounder,pooluva gounder,punnam vettuva gounder) and "Pallar" (Devendra Kula Vellalar).

பள்ளர் இனத்தை பற்றிய கல்வெட்டுகள் :
 
In the Thiruvallur District, Kuvam thirupuranthaka Eswarar koil inscription (1296 A.D), pertaining to "Thiribuvana Vira Ganda Gopala Devar (Telugu Chola) says as follows :-

"
வைத்தாந் பள்ளநும்"
"
இவை பள்ளன் எழுத்து" (S.I.I. Vol-XXVI, No.354).

In the Trichirapalli District Tiruppalatturai inscription says as follows :-

"
புலை அடியாரில் முன்னால் நங்கைபுரத்தில் பாட்டத்தில் நின்ற
புலை அடியாராய் உடையார் கம்பண உடையார் காரியப்பெர்
சந்த்ரசர் விற்க நான் கொண்டு உடையெனான சாதனப்படியால்
உள்ள பள்ளன் பிறவியும் இவன் பள்ளி அழகியாளும் இவன் மகன் நம்பாளும் இவன் தம்பி
வளத்தானும் இவன் தம்பி தாழியும்" (S.I.I. Vol-VIII, No.590).

In the Pudukkottai Thirumayam, Karaiyur Sundara Raja Perumal koil inscription pertaining to the king "Virupakshirayar" of 14-15th century A.D says as follows :-

"
வலையர் ஆடிக்கு ஒரு கூடு முசலும் காத்திகைக்கு
ஒரு கூடு முசலும் இடையர் பால் நெய்யும் பறையர்
ஆடிக்கு இரண்டு கொழியும் காத்திகைக்கு இரண்டு
கொழியும் பள்ளர் ஆடிக்கு இரண்டு கொழியும்
காத்திகைக்கு இரண்டு கொழியும்" (I.P.S. Ins. No. 715)

In the Pudukkottai Thirumayam, Ilambalakudi Madavira Vinayagar koil inscription of 16th century says as follows :-

"
இலம்பலக்குடியில் பள்ளற்கும் பறையற்கும்
விருது சண்டையாக காஞ்சிபுரத்துக்குப் போய்
கல்வெட்டுப்"

"
இலம்பலக் குடியில் பறையற்கும்
பள்ளற்கும் சண்டை" (Avanam-15, July-2004, Page-31&32)

In the Pudukkottai Thirumayam, Karaiyur Thirumanganeeswarar koil inscription of 16th century says as follows :-

"
காத்திகைக்கு இடையன் .ல் நெய்யும் ..
வலையன் முசலும் பள்ளன் கொழியும்
பரையன் கொழியும் ஆக இந்த சுவந்திரம்" (I.P.S. Ins. No.843)

In the Pudukkottai Thirumayam, Thekkattur Agatheeswarar koil inscription of 16th century says as follows :-

"
தெற்காட்டூராக அமைந்த ஊரவரொம்
மேற்படியூற் பள்ளற்கும் பறையற்கும்
பள்ளற்கு தவிலும் முரெசும் செமக்கலமும்
நன்மை தின்மை பெருவினைக்குங்கொட்டி
பொக கடவராகவும் பறையர் அஞ்சு கா" (I.P.S. Ins. No. 956)

In the Pudukkottai Thirumayam, Mellathanayam Mariamman koil inscription of 16th century says as follows :-

"
வீர சின்னு நாயக்கரவர்கள் பள்ளருக் குச்சிலா
சாதனங்கட்டளையிடப்படி பள்ளர் பறையர்
இருவகைப் பெருக்கும் வெள்ளானை
வாழை கரும்பு உண்டில்லை யென்று
விபகாரம் நடக்குமிடத்தில் பள்ளர் இந்த
விருது தங்களுக் யெல்லாமல் பறையருக்கு
இல்லை யென்று நெய்யிலெ க்கை பொடுமிடதில்
பள்ளருக்கு க்கைக்கு சுடாமல் வெற்றியான
படியினாலெ" (I.P.S. Ins. No. 929)

In the above said inscriptions, the "Pallar Community people" and "Paraiyar Community People" were placed together. In one of the inscription, the "Pallar Community People" referred as "Pulai Adiyars"

'பாண்டலை யிட்ட பலவல் புலையனை' (கலித்தொகை,மருத கலி)
  “துடி யெறியும் புலைய எறிகோல் கொள்ளும் இழிசின” (புறம் 287:1-2)
பாணர்(சங்க காலங்களில் மன்னனை புகழ்ந்து பாட்டு பாடி பரிசு பெரும் மக்கள் குழுக்கள் ) மற்றும் துடியர் சாதியை புலையர் என இங்கு கூறப்பட்டு உள்ளது. 

Hence there is no connection between "Vettuvar" (Vettuva gounder,pooluva gounder,punnam vettuva gounder) and "Pallar" (Devendra Kula Vellalar).

                                     

                          The history is true fact.





Sunday 27 July 2014

தென்வேட்டுவர் புலிகுத்தி நடுகல்

வேட்டுவ குலத்தவர்கள் தமிழ் மண்ணின் மூத்த போர்குடியினர் மற்றும் ஆண்ட பரம்பரை இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது.



ஆயர், வேட்டுவர், ஆடூஉத் திணைப் பெயர்.
ஆ வயின் வரூஉம் கிழவரும் உளரே.
(தொல்காப்பியம் 21)
காவலியர்,மாவலியர்,பூவலியர்,வெட்டுவர்,வில் வேடுவர் இந்த 5 பிரிவு வேட்டுவர்களை பற்றி கல்வெட்டுகள் ,செபெடுகள் ,இலக்கியங்கள் கூறுகிறது .
இன்று இந்த 5 பிரிவு வேட்டுவர்கள் இன்று வேட்டுவ கௌண்டர்,பூலுவ கௌண்டர் மற்றும் புன்னம் வேட்டுவ கௌண்டர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.இன்று வேட்டுவ குலத்தவர்கள் கொங்கு நாட்டில் பெரும் பான்மை இனத்தவராகவும் ,திருச்சி,தஞ்சாவூர்,மதுரை,தேனி திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் சிறுபான்மை இனத்தவராகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

கல்வெட்டுகள்,செபெடுகள் ,சங்க இலக்கியங்கள் ,குருகுல காவியம் ,பஞ்சவர்ண ராஜகுல காவியம்,அப்பசிமார் காவியம், வேட்டுவ கலிவெண்பா போன்ற ஆவணம்களில் இருந்து சுமார் 300 வேட்டுவ குலத்தை கண்டுபிடித்து நாமக்கல் வெப்படை இல் மூன்று மாதங்களுக்கு முன் நடந்த வேட்டுவர் மாநாட்டில் பேராசிரியர் ரா தங்கமணி புத்தகம் வெளிட்டார். முக்கியமான வேட்டுவ குலத்தின் பெயர்களை கிழே தருகிறேன்

சேர வேட்டுவ குலம்,வில் வேட்டுவ குலம் ,பனைய வேட்டுவ குலம் ,அந்துவ வேட்டுவ குலம் ,வஞ்சி வேட்டுவ குலம் ,மலைய வேட்டுவ குலம்,மலைஅரையர் வேட்டுவ குலம் ,சோழ வேட்டுவ குலம் ,வளவன் வேட்டுவ குலம் ,வெண்கொற்றர் வேட்டுவ குலம் ,சூரிய வேட்டுவ குலம் ,சந்திர வேட்டுவ குலம் ,அக்னி வேட்டுவ குலம் ,சத்திரிய வேட்டுவ குலம் ,புலி வேட்டுவ குலம் ,மீன் வேட்டுவ குலம் ,முல்லை வேட்டுவ குலம் ,வேள் வேட்டுவ குலம் ,வேந்த வேட்டுவ குலம், குடுமி வேட்டுவ குலம் ,காடை வேட்டுவ குலம் ,வன்னி வேட்டுவ குலம்,பூவாணிய வேட்டுவ குலம்,மும்முடி வேட்டுவ குலம் இது போல் பல வேட்டுவ கூட்ட பெயர்கள் இருக்கிறது .

இன்று வேட்டுவ குலத்தினர் கொங்கு நாட்டில் ஆறுநாட்டார் மலை முருகன் கோயில்(கரூர் ),பாலமலை முருகன் கோயில் (கரூர் ) ,கபிலர்மலை முருகன் கோயில் (நாமக்கல் ),ஓதி மலை முருகன் கோயில் (இரும்பொறை,ஈரோடு,), கிணத்துகடவு பொன்மலை முருகன் கோயில் (கோவை ) மற்றும் பல காளி கோயில்களில் முதல் மரியாதையை பெற்று வருகிறார்கள்.
ஓதி மலை முருகன் கோயில்களில் அந்துவ வேட்டுவ குலத்தினர்(சேரர்) முதல் மரியாதையை பெற்று வருகிறார்கள்.

புரவிபாளையம் வேட்டுவ குலத்தை சேர்ந்த பாளையக்காரர் சிங்களர்களோடு போர் செய்து வெற்றி பெற்றார் என்று கொங்கு மண்டல சதகம் கூறுகிறது.மேலும் மதுரை நாயக்கர் மன்னர்களோடு போர் செய்து தோல்வி அடைந்தார் என்று காடையூர் செப்பேடு கூறுகிறது.
சில வேட்டுவ பாளையகர்கள் நாயக்க மன்னர்களோடு போர் செய்து வெற்றி பெற்றார்கள் என்று வேட்டுவ பாளையகர்கள் வரலாறுகள் கூறுகிறது.
சில வேட்டுவ பாளையகர்கள் ஒக்கிலியர்களோடு(கன்னடர் ) போர் செய்து வெற்றி பெற்றார்கள் என்று தென்னிலை செபெடுகள் கூறிகிறது.
வேட்டுவ குலத்தவர்கள் களபிறர் மன்னர்களோடு போர் செய்து வெற்றி பெற்றார்கள் என்று குருகுல வரலாறுகள் கூறுகிறது.
குடி மக்களுக்கு தீங்கு செய்த ஒட்டியர்களையும் மற்றும் சல்லியர்களை வெட்டி போட்டு குடிமக்களை பாதுகாத்தார்கள் என்று செபெடுகள் கூறுகிறது.
மழ கொங்கை ஆண்ட வேட்டுவ குறுநில மன்னன் அல்லால இளையன் நாமக்கல்,ஜேடர்பாளையம் என்னும் இடத்தில் காவேரி ஆற்றில் அணை கட்டி கால்வாய் வெட்டினார்.இன்று இந்த கால்வாய் ராஜா கால்வாய் என்று மக்களால் அழைக்கபடுகிறது. இந்த செய்தியை கொங்கு மண்டல சதகம் கூறுகிறது.
செம்ப வேட்டுவ குலத்தை சேர்ந்த ஜெயங்கொண்ட சோழ கொங்கால்வன் அணை கட்டி கால்வாய் வெட்டிய செய்தியை கொடிவேரி,பவானி ஆற்றங்கரை கல்வெட்டு கூறுகிறது .
வேட்டுவ வீரர் பலர் சோழரது படையில் பணிபுரிந்து, சோழரது மேலாதிக்கம் பரவ பாடுபட்டனர். எடுத்துக்காட்டாக அழகன் காளி எனும் வேட்டுவத் தலைவன் முதல் இரசேந்திர சோழனின் வெற்றிக்காகப் போராடி வீர மரணம் அடைந்ததனைக் குறிப்பிடலாம். இதனைக் கூறும் தூக்காச்சிக் (ஈரோடு வட்டம்) கல்வெட்டைக் கீழே காண்போம்.
“ஸ்வஸ்திஸ்ரீ பூர்வதேசமும் கங்கையும்......
சோழர்க்குச் செல்லா நின்ற யாண்டு
........ஊராளி வேட்டுவன் அழகன்
காளி அவன் இதில் பட்டான்.”

பாண்டியர் வில்லாற்றல் மிக்க வேட்டுவ வீரர்களைப் பெருமளவில், தமது படையில் சேர்த்துக்கொண்டனர். கொங்கில் மேலாண்மையைச் செலுத்திய சுந்தர பாண்டியனின் ஆட்சிக்காலத்தில்(1252 – 1271) அந்தியூரன் எனும் வேட்டுவத் தலைவன், திருச்செங்கோட்டுப் போரில் பாண்டியரது பக்கம் நின்று போரிட்டு மாண்டான் என்பதனைச் சேலம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டால் அறிகிறோம். இதோ அக்கல்வெட்டு.
“ஸ்வஸ்தி ஸ்ரீ சுந்தரபாண்டியா
தேவற்கு யாண்டு 6 – வது
வடகரை நாட்டு உரகடங்கச்சதி
கண்ணையன் வேட்டுவரில்
அந்தியூரன்”

கோவில் கர்ப்பகிரகம் வடக்கு வெளி சுவர் - 'களந்தை பூலுவர் பெரும்பற்றார் சந்தரகுமார கோப்பன்ன மன்றடியார் கந்தசாமி கவுண்டர் கட்டிவைத்த கர்ப்பகிரகம் கோவில் முன் மண்டபம்'.
கோவை ,பேரூர் சிவன் கோவிலை கட்டியவர் வேட்டுவ குல தலைவர் புரவிபாளையம் ஜமீன். சூரிய வம்சம் படம் வேட்டுவர் அரண்மனையில் தான் படமாக்க பட்டது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு வடக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புலிக்குத்தி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நடுகல்லின் உயரம் மூன்றடி ஆகும் . நடுகல்லின் முன்புறம் ஒரு வீரன் புலியை குத்துவது போல் வடிக்கப்பட்டுள்ளது.வீரன் தலை மேல் கொண்டை காணப்படுகிறது. கைகளிலும் கால்களிலும் காப்புகள் காணப்படுகின்றன . வீரன் புலியின் வயிற்றில் ஈட்டியை குத்துவதை போல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. நடுகல்லின் பின்புறம் கல்வெட்டு காணப்படுகிறது. அதன் செய்தி பின்வருமாறு:

“மன்மத வருசம் மாசி மாசம் பதிமூன்று குளத்தூர் தெண் வேட்டுவரில் கங்காண்டார் கல்”

இதன் மூலம் இறந்த வீரனின் பெயர் கங்காண்டார் என்றும், வேட்டுவர் இனத்தை சேர்ந்த தெண் வேட்டுவர் குலத்தை சார்ந்தவன் என்பதும் தெரிகிறது. இந்த கல்வெட்டில் எந்த ஒரு மன்னரின் பெயரும் இல்லை . ஆனால் எழுத்துகளின் வடிவத்தை வைத்து இதன் காலம் 15 ஆம் நூற்றாண்டு என்று கூறலாம். 15 ஆம் நூற்றாண்டில் இரு முறை (1415 & 1475) மன்மத வருஷம் வருகிறது. எனவே இந்த கல்வெட்டு வெட்டப்பட்ட ஆண்டு இந்த இரண்டு ஆண்டுகளில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் குளத்தூர் என்றே வருகிறது.எனவே இந்த ஊரின் பெயர் குறைந்தது 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது உறுதியாகிறது.
பொதுவாக கொங்கு பகுதியில் வேட்டுவர் தொடர்பான பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன . இதுவரை 200 க்கும் மேற்பட்ட வேட்டுவர் குலங்கள் கண்டறியப்பட்டுள்ளன [1]. அவைகளில் தெண் வேட்டுவர் என்ற குலம்
குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த கல்வெட்டின் மூலம் தெண் வேட்டுவர் என்ற குலம் முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ளது .
சத்தியமங்கலம் பகுதியில் இதுவரை கண்டறியப்பட்ட நடுகற்கள் , மலைக்கிராமங்களான கடம்பூர், காடகநல்லி, அத்தியூர் ஆகிய இடங்களில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன [2] . சமவெளி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் நடுகல் இதுவே ஆகும். ஏனைய மலைபகுதி நடுகற்கள் சதி கற்களாகவும் காணப்படுகின்றன (சதிக்கல்லில் வீரனின் சிற்பத்தோடு மனைவியின் சிற்பமும் சேர்ந்து வடிக்கப்பட்டிருக்கும்). கர்நாடகத்தில் சதி கற்கள் மிக அதிக அளவில் காணப்படுகிறது [2]. இந்த மலைபகுதிகள் கர்நாடக எல்லையில் அமைந்துள்ளதால் சதி பண்பாட்டையும் சேர்த்து கொண்டுள்ளன. ஆனால் கொளத்தூர் நடுகல் சதி பண்பாடு இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கொங்கு பகுதியில் நடுகற்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டாலும் கல்வெட்டுடன் கிடைக்கும் நடுகற்கள், ஈரட்டிமலை, செலக்கரிச்சல், பழமங்கலம், துக்காச்சி, கன்னிவாடி போன்ற இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன [3]. இந்த நிலையில், கல்வெட்டுடன் கூடிய கொளத்தூர் நடுகல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது
(http://www.jeyamohan.in/?p=43096)
 

பட்ட பெயர்கள் (உடையார் ,வன்னியர் ,நயினார் ,கவுண்டர் ,முத்துராஜா ,தேவர் ).

 https://www.facebook.com/தமிழர் -வரலாற்று -ஆய்வு -மையம்-449518038569336/

பட்ட பெயர்கள் (உடையார் ,வன்னியர் ,நயினார் ,கவுண்டர் ,முத்துராஜா ,தேவர் ).


 உடையார் என்ற சொல் பட்ட பெயர் .இச்சொல் இன பெயர் கிடையாது



'..கரடி வேட்டுவரில் மானபரன பல்லவரயைன் பிள்ளை திருவெண்உடையார் வெஞ்சமகூடல் ஆளுடையார் விகிர்தருக்கு...'
(கரூர் கல்வெட்டு ,கொங்கு சோழர் ,கி பி 1248).

'...தென் பூவானிய நாட்டில் குளகுறிச்சியில்   ஊராளிகளில் பாத வேட்டுவரில் பிள்ளப்பன் உடையனேன் என் ஏரியில் --- '
(சேலம் கல்வெட்டு ,கொங்கு பாண்டியர் ,கி பி 1292)

'..கொண்ட நாடுடைய வெட்டுவதி அரையனான மல்லன் வெங்கடவன்..'
(தஞ்சாவூர் கல்வெட்டு(S.I.I,Vol XII,P-34),பல்லவ மன்னர்-நிருபதுங்க வர்மன் ,கி .பி 872).
கொண்ட நாடு + உடைய =கொண்ட நாடுடைய

இந்த மூன்று கல்வெட்டுகளும் வேட்டுவ குலத்தை சேர்ந்தது.உடையார் என்ற பட்ட பெயர் வேட்டுவ குலத்துக்கு இருப்பதை இந்த கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

  '...வீரநஞ்சராயர் உடையார் ...'
(திருப்பூர் கல்வெட்டு ,மைசூர் அரசர் ,கி .பி 1489) மைசூர் அரசர்களுக்கு(கன்னடகாரர்) உடையார் என்ற பட்ட பெயர் இருந்ததை இந்த கல்வெட்டு மூலம் அறியலாம்.

'...பார்க்வகோத்திரத்து மிலாடுடையான் அகலங்கன் மலையராதித்தனான செம்பியன் மிலாடுடையானேன் ......செம்பியன் மிளாடுடையனேன்...'
(பேளூர் கல்வெட்டு ,ஆதித்தன் 2,கி .பி 959). இந்த கல்வெட்டு உடையார்(பட்ட பெயர் ) இனத்தை சேர்ந்தது .

மிலாடு + உடைய = மிளாடுடையனேன்
உடைய(உடைமை ) என்ற சொல்லில் இருந்து உடையார் என்ற சொல் வந்தது.


வன்னியர்  என்ற சொல் பட்ட பெயர் .இச்சொல் இன பெயர் கிடையாது.



வன்னியர் என்ற சொல் பட்டபெயர் வன்னியர் என்ற சொல் இன பெயர் கிடையாது
'....கொடைக்கு கருணன் சத்தியத்துக்கு அரிச்சந்திரன் மறத்துக்கு வன்னியன் அழகுக்கு மன்மதன் பரிக்கு நகுலன் கரிக்கு உதையன் வில்லுக்கு விசையன் மல்லுக்கு வீமன் ...' (அல்லால இளையன் செப்பேடு ,கி பி 16) இங்கு வன்னியர் என்ற சொல் இனத்தை குறிக்கவில்லை.இங்கு வன்னியர் என்ற சொல் வீரர் என்று கூறுகிறது .

'...ஆத்தூர் மாந்தபடை வேட்டுவன் வன்னிய கவுண்டன் சாட்சி ..' (தென்னிலை செப்பேடு ,கி பி 1775) இங்கு வன்னிய கவுண்டன் என்பவர் மாந்தபடை வேட்டுவ குலத்தை சேர்ந்தவர் என்று தென்னிலை செப்பேடு கூறுகிறது .இங்கு வன்னிய கவுண்டன் என்ற சொல் சாதி பெயர் கிடையாது . இன்று வேட்டுவர்களில் வன்னி வேட்டுவ குலத்தினர் வாழ்ந்து வருகிறார்கள் .

வன்னி முத்தரையர்களை பற்றி கோவை ,கணியூர் செப்பேடு கூறுகிறது (கி பி 16)
விஜயநகர அரசர் 'ராஜா வன்னிய ராஜா ஸ்ரீ மல்லிகார்ஜுன தேவமகாராயர் ' பற்றி வில்வநல்லூர் செப்பேடு கூறுகிறது (தமிழ்நாடு செப்பேடுகள் தொகுதி -2)
மலையமான் இனத்தை (உடையார் இனம் ) சேர்ந்த ஒருவரின் பெயர் 'வன்னிய தேவேந்தர மலையமான் ராமன் போர் கிடாய் கொடாதான் ' என்று கல்வெட்டு (ARE 215 of 1934-35) கூறுகிறது .

கள்ளர் இனத்தை சேர்ந்த ஒருவரின் பெயர் 'வன்னியர் மிசிரிகண்டன் பொன்னம்பலநாத தொண்டைமான் 'என்று கல்வெட்டு ( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-845,ஆலங்குடி )கூறுகிறது .
'...இந்த நாடுகளையும் அறியாமல் செங்கீரையில் பிள்ளன் விசையரையனும் புறம்பன் வன்னியரையனும் ஆலங்குடி மழவராயர் படையை அழைத்து வந்து நாட்டிலே ...'( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-818,திருமெய்யம் ) இங்கு 'வன்னியரையனும்' என்ற சொல் இனத்தை குறிக்கவில்லை .

'.....புரட்டாதி மதம் 14 நயினார் மாவலிவாணதிராயர் காரிய காரியத்துக்கு .........'( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-815,திருமெய்யம் ,கி பி 15 ) மாவலி வாணதிராயருக்கு 'நயினார்'என்ற பட்ட பெயர் இருந்ததை இந்த கல்வெட்டு கூறுகிறது .


'......நெடுவாசலில் வன்னியரில் மாவலிவாணதிராயர் மக்களில் ......காலிங்கராயரும் ..' ( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-971,ஆலங்குடி ) மாவலி வாணதிராயருக்கு 'வன்னியர் 'என்ற பட்ட பெயர் இருந்ததை இந்த கல்வெட்டு கூறுகிறது .

 '...இராகுத்த மிண்டன் சொரிவன்னியர் சூரியன் புவனேக வீரன் பதினெட்டு வன்னியரை முதுகு புரங்கண்டான் காங்கேயனை வென்று கடையில் விலை கொண்டான் வேட்டுமாவலிக்கு விரிந்திடோம் பாண்டியன் ..'
( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-758,திருமெய்யம் ,கி பி 15 )
வேட்டுமாவலிக்கு -வேட்டுவமாவலிக்கு

வன்னியர் என்ற பட்டபெயர் வேட்டுவர் இனம் ,மலையமான் இனம் (உடையார் இனம் ),கள்ளர் இனம் ,முத்தரையர் இனம் ,விஜயநகர் அரசர் (கன்னடர் ) போன்ற சாதிகளுக்கு இருந்ததை கல்வெட்டுகள் கூறுகிறது .

 மல்லன் என்ற சொல் இன பெயர் இல்லை

'.. இடிகரையில் இருக்கும் வெள்ளாளன் பை யைய்யரில் மள்ளன் சிறியான் ' என்பவரை பற்றி கல்வெட்டு (கோவை ,கி பி 13) கூறுகிறது . இக்கல்வெட்டு வெள்ளாளர் இனத்தை சேர்ந்தது .


'...கொண்டநாடு உடைய வேட்டுவதி அரையர் மல்லன் வேங்கடவன் ' என்பவரை பற்றி கல்வெட்டு(தஞ்சாவூர் ,
(S.i.i XII page-34). இக்கல்வெட்டு வேட்டுவர் இனத்தை சேர்ந்தது .

'...மீனவன் தமிழதியயரையனன மல்லன் ஆனந்தனுக்கு .'( புது கோட்டை கல்வெட்டு -63).இக்கல்வெட்டு முத்தரையர் இனத்தை சேர்ந்தது .

மற்போர் செயும் வீரனை 'மல்லன் ' என அழைக்கபட்டது.மேலும் 'வளமானவன் ' என்ற அர்த்தத்தில் பயன்படுத்தபட்டது .


 அரசர்கள் தங்களது அரசியல் அதிகாரிகளுக்கு  காலிங்கராயர் ,மழவராயர் ,வாணராயர் ,இருங்கொளன்,காங்கேயன் ,வேணாடுடையான்,குருகுல ராயர் ,மூவேந்த வேளான்,வேளான்,பாண்டியனார் ,சேரமான் ,சோழனார்,தொண்டைமான்,பல்லவராயர்,   போன்ற பெயர்களை வழங்கி வந்தனர்.


 வேட்டுவ குல தலைவர்களுக்கு பட்ட பெயர்கள் (உடையார் ,வன்னியர் ,நயினார் ,கவுண்டர் ,முத்துராஜா ,தேவர் ) இருந்ததை கல்வெட்டுகள் கூறுகிறது .



Wednesday 23 July 2014

மழவர்



'வன்கண் மழவர் பூந்தொடை விழவின் ' என்று அகநானூறு -187 கூறுகிறது .
தொடை -அம்பு ,விழவு-விழா
'பயற்சி பெற்று முதிர்ச்சி அடைந்த வேட்டுவர் பூந்தொடை விழவு என்னும் இன குழுவிற்கே உரித்தான அறிமுக விழா சடங்கு வாயிலாக அறிந்தேர்பு பெற்றன ' (1981-Drama in Ancient Tamil Society:N.C.H.B ,Sivathamby k)கார்த்திகேசு சிவதம்பி மழவரை வேட்டுவ குலத்தவர் என்று கூறுகிறார் .'மழவர் பெருமகன் மாவள் ஓரி ' என்று நற்றிணை -52 கூறுகிறது.





கொங்கு வேட்டுவனுக்கு பிறந்தவன்தான் கொங்கு வேட்டுவ வரலாற்றை சொந்தம் கொண்டாட முடியும் .

வல்வில் என்று அவன் பெயரின் அடைமொழி குறிப்பிடுகிறது. வில்லுக்கு உரிமையுடையவர்கள் யார்? வேட்டுவர்கள். ஓரியைப் பற்றி வன்பரணர் பாடிய பாடல்,

………யாம்

நாட்டிடன் நாட்டிடன் வருதும் ஈங்கோர்

வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் (புறம் 152)
...
என்று விறலியர் புகழ்வதாகக் கூறுகின்றது. பல நாடுகளுக்குச் சென்று வருபவர்கள் நாங்கள்; ஆனால் எங்கும் உனக்கு நிகரான வேட்டுவர் எவரும் இல்லை என்பது இதன் பொருள். ஆக வல்வில் ஓரி வேட்டுவர் சாதியைச் சேர்ந்தவன் என்பது உறுதிப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் கொங்குப் பகுதியிலும் பரவலாக வாழும் வேட்டுவர் சாதியினர் வல்வில் ஓரியைத் தங்களுடையவனாகக் கொண்டாட எல்லா வகையிலும் உரிமை இருக்கிறது என்பதில் ஐயமில்லை.


மழ கொங்கை ஆண்ட வேட்டுவ மன்னன் ,அல்லள இளையன்( அல்லள இளையன் நாயக்கர் ) இக்கு 'நாயக்கர்' என்ற பட்ட பெயர் இருப்பதை கல்வெட்டுகள் கூறுகிறது . ' நாயக்கர் ' என்ற பட்ட பெயரை வேட்டுவ குலத்தவர்கள் வைத்து கொண்டு நாயக்கர் மன்னர் திருமலைநாயக்கர் யை உரிமை கொண்டாட முடியாது . வேட்டுவ சாதியும் ,நாயக்கர் சாதியும் ஒரே சாதி கிடையாது .

இது போல வேட்டுவ குலத்தில் ஒருவருக்கு 'செய்யான் பல்லவராயர்' என்ற பட்ட பெயர் இருப்பதை கல்வெட்டுகள் கூறுகிறது .இந்த பட்ட பேரை வைத்து கொண்டு வேட்டுவ குலத்தார் ,பல்லவ அரசனை உரிமை கொண்டாட முடியாது .
இது போல மன்னர்கள் தங்களுடைய அரசு அதிகாரிக்கும் ,படைதலைவருக்கும் வாணராயர் ,மழவராயர்,இருங்கோளன் போன்ற பட்ட பெயர்களை வழங்கினார்கள் .இந்த பட்ட பெயரை வைத்து கொண்டு தாங்கள் தான் மன்னர் பரம்பரை என கூற முடியாது .

உதாரணம் :

'.... பள்ளி செங்கேணி சாத்தன் சோழ நான சேனாபதிகள் வாண ராஜர் ' என கல்வெட்டு(ARE 138 of 1896, குலோத்துங்கன் 1) கூறுகிறது .
  'சுரதிமான் சனாதர் அரைய தேவனான வாண வித்சாதிர நாடாள்வான்'
(பெரம்பலூர் கல்வெட்டு ,கி பி 12)-இவன் உடையார் இனத்தை சேர்ந்தவன் .

  புதுகோட்டை மாவட்டம் ,கொத்தமங்கலம் செப்பேடு 'கார்காத்த வெள்ளாள வாணதிராயர் , என்பவரை பற்றி கூறுகிறது . வாணராயர் என்ற பட்ட பெயர் வெள்ளாள கௌண்டெரில் ஒருவருக்கு இருப்பதை கல்வெட்டுகள் மூலம் அறியலாம் .

மெக்கென்சி சேகரித்து உள்ள குறிப்புகளில் 'அரியலூர் பாளையகாரர் கைபியது ' என்னும் தலைப்பில் சென்னை அரசினர் கீழ்திசை ஓலை சுவடி நூலகத்தில் காணப்பெறுகிறது . இக் கைபியது 'மாளவராயர் அரியலூர் பாளையகாரர் ,சமஸ்தானம் மதுரை ,திருச்சிராப்பள்ளி வகையறா ' என்று தொடங்கபெற்று இருக்கிறது . மேலும் விஜயநகர் வேந்தர் (கி பி 1378-1533) ,அரியலூர் பாளையகாரருக்கு 'மழவராயர் ' என்ற பட்ட பெயரை கொடுத்தார் என்ற செய்தியும் கூறபட்டு உள்ளது . விஜயநகர் வேந்தர் காலம் மற்றும் மதுரை நாயக்கர் காலங்களில் (கி பி 16,17) அரியலூர் பாளையக்காரர் 'மழவராயர் 'என்ற பட்ட பெயரோடு அரியலூர் பகுதியை ஆட்சி செய்தார் என்பதை இந்த கைபியது மூலம் அறியலாம் .

'... பாண்டிய மழவரையர் சேதிராயன் இடத்து ..'
(அழகர் கோயில் கல்வெட்டு ,கி பி 1459).

கொல்லன் வயல் செப்பேடு (திரு வாவடுதுறை ஆதினம் செப்பேடு ) கி பி 1439 இல் வெளியிட பட்டது .இச் செபெடில் 'அரசு சிவந்த பெருமாளான தேவராயர் மழவராயர் 'என்பவரை பற்றி கூறபெற்று உள்ளது .

 பராக்கிரம பாண்டிய மழவராயர் நல்லூர் செப்பேடு (திரு வாவடுதுறை ஆதினம் செப்பேடு ) கி பி 1505 இல் வெளியிட பட்டது . ' பராக்கிரம பாண்டிய மழவராயர் ' என்பவரை பற்றி இச்செப்பேடில் கூற பட்டு உள்ளது .

மழவராயர்,வாணராயர் போன்ற வார்த்தைகள் பட்ட பெயராக பயன்படுத்தி இருப்பதை கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.இந்த பட்ட பெயர்களை வைத்து கொண்டு தாங்கள் தான் மன்னர் பரம்பரை என உரிமை கொண்டாட முடியாது.




 
 

வேட்டுவர் சாதி

 https://www.facebook.com/தமிழர் -வரலாற்று -ஆய்வு -மையம்-449518038569336/


ஆயர், வேட்டுவர், ஆடூஉத் திணைப் பெயர்.
ஆ வயின் வரூஉம் கிழவரும் உளரே.
(தொல்காப்பியம் 21)
வேட்டுவர் சாதி பற்றி தொல்காப்பியம் கூறுகிறது .
தொல்காப்பியரால் பேசப்பட்ட வேட்டுவர் சாதியினர்(காவலியர்,மாவலியர்,பூவலியர்
வேட்டுவர்,,வில் வேடுவர் ) 5 பெயர்களில் அழைக்கபட்டது   என்பதை கல்வெட்டுகள் ,செப்பேடுகள் மூலம் அறியலாம் .



வேட்டுவ சாதியை 5 பெயர்களில் அழைக்கபட்டது
கல்வெட்டுகள் ,செப்பேடுகள் மற்றும் ஓலைசுவடிகளில் வேட்டுவர்களின் சொல்லாட்சிகள் .
1.காவலியர்,பூவலியர்,மாவலியர்,வேடர் ,வேட்டுவர்
2.காவலன் ,பூவலன் ,மாவலன் ,வேடர் ,வேட்டுவர்
3.காவுலவன் ,பூவுலவன் ,மாவுலவன்,வில்வேடுவர்,வேட்டுவர்
4.காவளவர்,பூவளவர்,மாவளவர், வில்வேடுவர்,வேட்டுவர்
5.காவிலன் ,பூவிலன் ,மாவிலன் ,வில்வேடுவர்,வேட்டுவர்

  
வேட்டுவ சாதியினர் இன்று வேட்டுவ கௌண்டர்,பூலுவ கௌண்டர் மற்றும் புன்னம் வேட்டுவ கௌண்டர்களாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதை கல்வெட்டுகள் ,செப்பேடுகள் மூலம் அறியலாம் .இன்று வேட்டுவ குலத்தவர்கள் கொங்கு நாட்டில் பெரும் பான்மைனத்தவராகவும் ,திருச்சி,தஞ்சாவூர்,மதுரை,தேனி திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் சிறுபான்மை இனத்தவராகவும் வாழ்ந்து வருகிறார்கள்.